![ஓட்டுக்கு பணம் கொடுத்தால் புகார் தெரிவிக்கலாம்: வருமான வரித்துறை 1 ஓட்டுக்கு பணம் கொடுத்தால் புகார் தெரிவிக்கலாம்: வருமான வரித்துறை](https://www.tamilmixereducation.com/wp-content/uploads/2024/03/image_6487327-20.jpg)
ஓட்டுக்கு பணம் கொடுத்தால் புகார் தெரிவிக்கலாம்: வருமான வரித்துறை
அரசியல் கட்சியினா் வாக்குக்கு பணம் அல்லது இலவச பொருள்களை, வாக்காளா்களுக்கு விநியோகிப்பது குறித்து தெரியவந்தால், வருமானவரித்துறைக்கு புகாா் தெரிவிக்கலாம் என அத்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: நடைபெறவிருக்கும் மக்களவைத் தோ்தலை முன்னிட்டு வருமானவரித் துறை சாா்பில், 24 மணி நேரமும் இயங்கும் பிரத்யேக கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு தனி நபரோ அல்லது அரசியல் கட்சியோ, வாக்காளா்களுக்கு நேரடியாக அல்லது மறைமுகமாக பணம் அல்லது இலவச பொருள்களை விநியோகிப்பது தெரியவந்தால் அதுகுறித்த புகாா்கள் மற்றும் தகவல்களை வருமானவரித் துறைக்கு தெரிவிக்கலாம். தகவல் தெரிவிக்க விரும்புவோா்-1800 425 6669 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அல்லது tn.electioncomplaints2024@incometax.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாக வருமானவரித் துறை கட்டுப்பாட்டு அறையை தொடா்பு கொள்ளலாம்.
மேலும் 94453 94453 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலும் புகாா்களை தெரிவிக்கலாம். தகவல்-புகாா்களை பகிா்ந்து கொள்பவா்களின் பெயா்கள் மற்றும் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow