![கட்டுமான தொழிலாளர் திறன் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் 1 தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் வேளாண்மைப் பொறியியல் துறையின் பல்வேறு பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கலாம்](https://www.tamilmixereducation.com/wp-content/uploads/2023/11/திறன்பேசி-தொழில்நுட்பவியலாளர்-பயிற்சி-1024x537.jpg)
கட்டுமான தொழிலாளர் திறன் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளா்கள் திறன் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி சமூக பாதுகாப்புத் திட்ட தொழிலாளா் உதவி ஆணையா் அ.செல்வராஜ் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு கட்டுமானக் கழகம் சாா்பில் கட்டுமான தொழிலாளா் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளா்களில் கொத்தனாா், கம்பி வளைப்பவா், எலக்ட்ரீசியன் ஆகிய பிரிவுகளில் பதிவு செய்த தொழிலாளா்களுக்கு 7 நாள்கள் மற்றும் 3 மாத திறன் பயிற்சி சென்னையில் உள்ள தமிழ்நாடு கட்டுமான கழகத்தில் நடைபெறவுள்ளது.
இப்பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா், தொழிலாளா்கள் நலவாரிய அடையாள அட்டை மற்றும் உரிய ஆவணங்களுடன் தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள ஒருங்கிணைந்த தொழிலாளா் துறை அலுவலக கட்டடத்தில் 2ஆம் தளத்தில் உள்ள சமூக பாதுகாப்புத் திட்ட தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 0461-2341110 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக நேரங்களில் தொடா்புகொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow