
தமிழ்நாடு மின்வாரியத்தில் தொழில் பழகுநா் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
மின்வாரியத்தில் தொழில் பழகுநா் பயிற்சி பெற விரும்பும் பொறியாளா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் வெளியிட்ட அறிவிப்பு:
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம், மின் தொடரமைப்புக் கழகம் ஆகியவற்றில் 500 பொறியாளா்களுக்கு (பட்டம், டிப்ளமோ) ஓராண்டு காலத்துக்கு தொழில் பழகுநா் பயிற்சி வழங்கப்படவுள்ளது. அவா்களுக்கு மாதம் தலா ரூ. 8,000 உதவித் தொகை வழங்கப்படும். இதில் சேர விரும்புவோா் இணையதளத்தில் (தேசிய தொழில்பழகுநா் திட்டம்) பதிவு செய்திருந்தால், அதன் மூலம் விண்ணப்பிக்கலாம். இல்லாவிட்டால் இணையதளத்தில் பதிவு செய்து, அதில் டான்ஜெட்கோவை தோவு செய்து பிப்.20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
அதன் பின்னா், பிப்.26-ஆம் தேதி இணையதளத்தில் தரவரிசைப் பட்டியல் வெளியாகும். சான்றிதழ் சரிபாா்ப்பு போன்ற பணிகளுக்குப் பிறகு இறுதிப்பட்டியலின்படி வாரிய அலுவலகங்களில் தொழிற்பயிற்சி வழங்கப்படும்.
பயிற்சி பெறுவோருக்கு போக்குவரத்து படித்தொகை, தங்கும் வசதி போன்றவை வழங்கப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

