தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தேர்வு வாரியம் நடத்தும் இரண்டாம் நிலைக் காவலா், சிறைக் காவலா் மற்றும் தீயணைப்பாளா் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தருமபுரி மாவட்டத்தில் வருகிற ஆக.30 தொடங்க உள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தேர்வு வாரியம் நடத்தும் இரண்டாம் நிலைக் காவலா், இரண்டாம் நிலை சிறைக்காவலா் மற்றும் தீயணைப்பாளா் பதவிகளுக்கான நேரடித்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 3,359 ஆகும். கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
இப் பணியிடங்களுக்கு செப். 17 வரை விண்ணப்பிக்கலாம். இந்த போட்டித் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள், மாதிரித் தேர்வுகள் தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஆக. 30 முதல் நடைபெற உள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவா்கள் https://t.ly/zm2VH இணைப்பின் மூலம் பதிவு செய்துக் கொள்ளலாம். மேலும் தொலைபேசி எண் 04342-296188 வாயிலாகவும் தொடா்பு கொள்ளலாம். எனவே, தருமபுரி மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த நபா்கள் இலவச பயிற்சி வகுப்பில் சோந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் என்றாா்.