மானிய விலையில் பண்ணைக் கருவிகள் – உடுமலை
TAMIL MIXER EDUCATION.ன்
விவசாய செய்திகள்
மானிய விலையில் பண்ணைக் கருவிகள்
– உடுமலை
உடுமலை
வட்டாரத்தில், விவசாயிகளுக்கு மானிய விலையில் பண்ணை
கருவிகள் வழங்க, 4.95 லட்சம்
ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
உடுமலை
வட்டார வேளாண் துறை
வாயிலாக, விவசாயிகளுக்கு பண்ணை
கருவிகள் வழங்கும் திட்டம்
செயல்படுத்தப்படுகிறது.
ஒரு
தொகுப்பில், கடப்பாரை, இரும்பு
சட்டி, களைக்கொத்து, மண்
வெட்டி, இரண்டு கதிர்
அரிவாள் என ஆறு
கருவிகள், 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது.
அனைத்து
கிராம ஒருங்கிணைந்த வேளாண்
வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும், சின்னக்குமாரபாளையம், குருவப்பநாயக்கனூர், மொடக்குபட்டி, தீபாலபட்டி, கணக்கம்பாளையம், கண்ணமநாயக்கனூர், சின்னவீரம்பட்டி, ஆலம்பாளையம், ஜிலேபிநாயக்கன்பாளையம், தின்னப்பட்டி, குறிஞ்சேரி, வட பூதனம்
ஆகிய, 12 கிராமங்களுக்கு, 300 தொகுப்புகளும், பிற கிராமங்களுக்கு, 30 தொகுப்புகள் என, 330 தொகுப்புகள் வழங்க,
ரூ. 4.95 லட்சம் நிதி
ஒதுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் உழவன் செயலி வழியாக
பதிவு செய்து, பயன்பெறலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow