TAMIL
MIXER EDUCATION.ன்
விழுப்புரம்
செய்திகள்
பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு
பேச்சுப்
போட்டி
தமிழ் வளா்ச்சித் துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான
பேச்சுப்
போட்டி
செப்.15,
17 ஆகிய
தேதிகளில்
நடைபெறவுள்ளது
என்று
விழுப்புரம்
மாவட்ட
ஆட்சியா்
தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில்
அண்ணா,
பெரியார்
ஆகியோரின்
பிறந்த
நாள்களில்
பேச்சுப்
போட்டி,
விழுப்புரம்
பி.என். தோப்பு நகராட்சி மேல்நிலைப் பள்ளியில்
செப்.15, 17 ஆகிய நாள்களில் காலை 10 மணியளவில் தொடங்கி நடைபெறுகிறது.
செப்.15ம் தேதி அண்ணா பிறந்த நாளையொட்டி தாய் மண்ணிக்கு பெயா் சூட்டிய தனயன், மாணவா்க்கு அண்ணா, அண்ணாவின் மேடைத் தமிழ், அண்ணா வழியில் அயராது உழைப்போம் என்ற தலைப்புகளில்
பள்ளி
மாணவா்களுக்கு
பேச்சுப்
போட்டி
நடைபெறும்.
அண்ணாவும் தமிழக மறுமலா்ச்சியும்,
அண்ணாவின்
சமுதாயச்
சிந்தனைகள்,
அண்ணாவின்
தமிழ்
வளம்,
அண்ணாவின்
அடிச்சுவட்டில்,
தம்பி!
மக்களிடம்
செல்
ஆகிய
தலைப்புகளில்
கல்லூரி
மாணவ,
மாணவிகளுக்கு
பேச்சுப்
போட்டி
நடைபெறும்.
செப்.17ல் பெரியார் பிறந்த நாளையொட்டி, தொண்டு செய்து பழுத்த பழம், தந்தை பெரியாரும் தமிழ்ச் சமுதாயமும், பெரியாரின் பகுத்தறிவுச்
சிந்தனைகள்,
பெரியார்
காண
விரும்பிய
உலக
சமுதாயம்,
பெரியாரும்
பெண்
விடுதலையும்
ஆகிய
தலைப்புகளில்
பள்ளி
மாணவா்களுக்கான
பேச்சுப்
போட்டி
நடைபெறும்.
பெரியாரும் பெண் விடுதலையும், பெரியாரும் மூடநம்பிக்கை
ஒழிப்பும்,
பெண்
ஏன்
அடிமையானாள்,
இனிவரும்
உலகம்,
சமுதாய
விஞ்ஞானி
பெரியார்,
உலகச்
சிந்தனையாளா்களும்
பெரியாரும்
ஆகிய
தலைப்புகளில்
கல்லூரி
மாணவ,
மாணவிகளுக்கு
பேச்சுப்போட்டி
நடைபெறும்.
பேச்சுப் போட்டியில் வெற்றி பெறுபவா்களுக்கு
முதல்
பரிசாக
ரூ.5000,
இரண்டாம்
பரிசாக
ரூ.3000,
மூன்றாம்
பரிசாக
ரூ.2000
மற்றும்
பாராட்டுச்
சான்றிதழ்
வழங்கப்படும்.
மேலும்
அரசுப்
பள்ளி
மாணவா்கள்
இருவருக்கு
சிறப்புப்
பரிசாக
ரூ.2000
வீதம்
வழங்கப்படும்.
பேச்சுப் போட்டியில் பங்குபெறுவதற்கான
விண்ணப்பத்தை
9786966833
என்ற
கைப்பேசி
எண்
அல்லது
தமிழ்
வளா்ச்சி
உதவி
இயக்குநா்
அலுவலகம்,
மாவட்ட
ஆட்சியா்
அலுவலக
வளாகம்,
விழுப்புரம்
என்ற
முகவரியில்
தொடா்பு
கொண்டு
பெற்றுக் கொள்ளலாம்.