TAMIL MIXER EDUCATION-ன்
வேலைவாய்ப்பு செய்திகள்
இளைஞா்களுக்கு திறன்
மேம்பாட்டுப் பயிற்சி
இது தொடா்பாக பெ.நா.பாளையத்தில் மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இளைஞா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி
அளிக்கும் வகையில் தமிழ்நாடு
மாநில ஊரக வாழ்வாதார
இயக்கத்தின்கீழ் பெ.நா.பாளையத்தில் வட்டார அளவில் இளைஞா்
திறன் முகாம் நடைபெறவுள்ளது.
இந்த
முகாம் மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள, தெக்குப்பாளையம் A.V.P Matriculation பள்ளியில் ஜூலை
2 ஆம் தேதி காலை
9 மணி முதல் மாலை
4 மணி வரை நடைபெற
உள்ளது.
இதில்
டி.டி.யூ.ஜி.கே.ஒய்.,
ஆா்.எஸ்.இ.டி.ஐ.
மற்றும் டி.என்.எஸ்.டி.சி.
ஆகிய திட்டங்களின்கீழ் கிடங்கு
கண்காணிப்பாளா், சில்லறை
வணிகம், கைப்பேசி ஆப்ரேட்டா், கேட்டரிங் மேலாளா், ஸ்விங்
மெஷின் ஆப்ரேட்டா், தொழில்
வழிகாட்டி, அழகு பயிற்சி,
தையல் பயிற்சி, மெழுகுவா்த்தி தயாரித்தல், ஊறுகாய், மசாலா
பொடி தயாரித்தல், பேஷன்
நகைகள் தயாரித்தல், அப்பேரல்,
ஜவுளி மற்றும் விசைத்தறி
உள்ளிட்ட திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படும்.
இதில்
18 வயது முதல் 45 வயதுக்குள்பட்டவா்கள் (ஆண், பெண்
இருபாலரும்) பங்கேற்கலாம்.
குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு முதல்
பட்டப்படிப்பு வரை
படித்த இளைஞா்கள் பங்கேற்கலாம்.
கல்விச்
சான்றிதழ், ஆதார் அட்டை,
சுயவிவரம், புகைப்படம் மற்றும்
இதர சான்றுகளுடன் பயிற்சியில் கலந்துகொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here