தமிழக சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை – அரசாணை வெளியீடு
தமிழக சுகாதாரப்
பணியாளர்களுக்கு ரூ.15,000
ஊக்கத்தொகை – அரசாணை வெளியீடு
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா
தொற்று அதிகரித்து வருவதன்
காரணமாக பல தரப்பு
மக்கள் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகின்றனர். மக்கள்
மட்டுமல்லாமல் கொரோனாவிற்கு எதிராக போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப்
பணியாளர்கள் போன்ற பலரும்
கொரோனா நோய்த்தொற்றுக்கு உள்ளாகி
வருகின்றனர். இதனால் இவர்களது
குடும்பத்தினர் கடுமையான
பாதிப்புக்கு உள்ளாகி
உள்ளனர்.
இந்நிலையில் பணியின் பொழுது கொரோனா
தொற்று பாதிப்புக்கு உள்ளாகி
உயிரிழக்கும் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு தக்க
உதவித்தொகை வழங்க வேண்டும்
என்றும் மேலும் அவர்களின்
குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க
வேண்டும் என்றும் சென்னை
உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியள்ளது. மேலும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு மற்றும்
பாதிப்பின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் தமிழகத்தில் மிக
கடினமான ஊரடங்கு நடவடிக்கை
அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு ஓர்
அரசாணையை வெளியிட்டுள்ளது. அதில்
தமிழகத்தில் கொரோனா பணியில்
ஈடுபடும் சுகாதாரப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி
கொரோனா தடுப்பு பணியில்
ஈடுபட்டு வரும் 108 அவசர
ஊர்தி, 104 அமரர் ஊர்தி
ஆகிய பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.15,000 வழங்கப்படும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது
இந்த அறிவிப்பு சுகாதாரத்துறை பணியாளர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.