HomeBlogமாநில அரசுடன் பிரதமர் மோடி மார்ச் 17 ஆலோசனை – கொரோனா எதிரொலி
- Advertisment -

மாநில அரசுடன் பிரதமர் மோடி மார்ச் 17 ஆலோசனை – கொரோனா எதிரொலி

 

Prime Minister Modi's March 17 consultation with the state government - Corona Echo

மாநில அரசுடன்
பிரதமர் மோடி மார்ச்
17
ஆலோசனைகொரோனா எதிரொலி

நாடு
முழுவதும் கொரோனா இரண்டாம்
அலை தாக்கம் பரவி
வருகிறது. இதனால் பல்வேறு
மாநிலங்களில் முழு
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் ஊரடங்கு குறித்து ஆலோசனை
கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலை
தாக்கத்தில் இருந்து நாட்டு
மக்களை காக்க மார்ச்
17-
ஆம் தேதி பிரதமர்
மோடி தலைமையிலான ஆலோசனை
கூட்டம் நடத்தப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக
இதுவரை 1,13,85,339 பேர்
பாதிக்கப்பட்டுள்ளனர். அதில்
1,10,07,352
பேர் குணமடைந்த நிலையில்
1,58,725
பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த
ஆண்டு டிசம்பர் மாதத்தில்
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை விட
தற்போது 33% பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகம்,
மகாராஷ்டிரா, கேரளா உள்பட
8
மாநிலங்களில் நாட்டில்
உள்ள மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் 85% பேர் உள்ளனர்
என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா
இரண்டாம் அலை வேகமாக
பரவி வருவதால் வரும்
21-
ஆம் தேதி வரை
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால்
பல மாநிலங்களில் கொரோனா
கட்டுப்பாடு விதிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். முகக்கவசம் அணிதல்,
சமூக இடைவெளி போன்றவை
கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனவே
நாடு முழுவதும் பரவி
வரும் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து பிரதமர் மாநில
அரசுகளுடன் நாளை (மார்ச்
17)
காணொளி காட்சி மூலமாக
ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்நிலையில், மத்திய அரசு
கொரோனா பரவலை தடுக்க
மீண்டும் முழு ஊரடங்கு
அமல்படுத்த உள்ளதாக சமூக
வலைத்தளங்களில் தகவல்
பரவி வருகிறது என்பது
குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -