நாட்டா –
நுழைவு தேர்வு –
மார்ச் 28க்குள் விண்ணப்பம்
பிளஸ்
2 மாணவர்கள் பி.ஆர்க்.
படிப்பில் சேர்வதற்கான ‘நாட்டா‘
நுழைவு தேர்வுக்கு மார்ச்
28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பிளஸ்
2 படிக்கும் மாணவர்கள் பொது
தேர்வுக்கு பின் பி.ஆர்க்.
கட்டட அமைப்பியல் படிப்பில்
சேர்வதற்கு நாட்டா நுழைவு
தேர்வில் தேர்ச்சி பெற
வேண்டும். நடப்பு கல்வி
ஆண்டுக்கான நாட்டா நுழைவு
தேர்வு இரண்டு முறை
நடத்தப்பட உள்ளது. முதல்
கட்டமாக ஏப். 10ம்
தேதியும் இரண்டாம் கட்டமாக
ஜூன் 12ம் தேதியும்
தேர்வு நடத்தப்படுகிறது.
இரண்டு
கட்ட தேர்வுகளிலும் ஒரே
நாளில் இரண்டு குழுக்களாக தேர்வு நடத்தப்படுகிறது. மாணவர்கள்
விரும்பினால் இரண்டு
கட்ட தேர்விலும் பங்கேற்கலாம். எதில் அதிக மதிப்பெண்
உள்ளதோ அந்த மதிப்பெண்
மாணவர் சேர்க்கைக்கு கணக்கில்
எடுக்கப்படும்.
இந்த
தேர்வுக்கான ‘ஆன்லைன்‘ விண்ணப்ப
பதிவு இந்த மாதம்
5ம் தேதி துவங்கியுள்ளது. வரும் 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
என நாட்டா தேர்வு
கமிட்டி அறிவித்துள்ளது. கூடுதல்
விபரங்களை www.nata.in
என்ற இணையதளத்தில் தெரிந்து
கொள்ளலாம்.