சீருடைப் பணியாளா் தேர்வில் பங்கேற்போருக்கான மாதிரித் தேர்வு
TAMIL MIXER
EDUCATION.ன்
நாமக்கல்
செய்திகள்
சீருடைப் பணியாளா் தேர்வில் பங்கேற்போருக்கான
மாதிரித்
தேர்வு
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு
அலுவலகத்தில்,
சீருடைப்
பணியாளா்
தேர்வுக்கான
மாதிரித்
தேர்வு
வெள்ளிக்கிழமை(நவ.18) நடைபெறுகிறது.
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தில்
செயல்படும்
தன்னார்வ
பயிலும்
வட்டத்தின்
சார்பில்
பல்வேறு
போட்டித்
தேர்வுகளுக்கு
இலவசமாக
பயிற்சி
அளிக்கப்படுகிறது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தேர்வுக் குழுமத்தால், சிறைத்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறையில்
காலியாக
உள்ள
3,552 பணியிடங்களை
நிரப்புவதற்கான
அறிவிப்பு
கடந்த
ஜூலை
மாதம்
வெளியிடப்பட்டது.
அதற்கான எழுத்துத் தேர்வு வரும் நவ.27ம் தேதி நடைபெற உள்ளது. நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தில்
இதற்கான
இலவச
பயிற்சி
வகுப்பு
நடத்தப்பட
இருக்கிறது.
இதனையொட்டி வரும் 18ம் தேதி காலை 11 மணிக்கு மாதிரித் தேர்வு நடைபெறுகிறது.
இத்தேர்வுக்கு
விண்ணப்பித்த
அனைவரும்
கலந்து
கொள்ளலாம்.
மனுதாரா்கள்
தங்களின்
விவரத்தினை
04286 222260
என்ற
தொலைபேசி
வாயிலாக
தொடா்பு
கொண்டு
தெரிவிக்கலாம்.
மாவட்ட வேலைவாய்ப்பு
அலுவலகத்தை
நேரில்
தொடா்பு
கொண்டும்
பயன்பெறலாம்.
தேர்வா்கள்
மாதிரித்
தேர்வு
நடைபெறும்
நாளன்று
காலை
10.30 மணிக்குள்
ஆதார்
அட்டை
நகல்
ஒன்று,
கடவுச்சீட்டு
அளவிலான
புகைப்படம்
ஒன்று,
மாதிரித்
தேர்விற்கு
விண்ணப்பித்த
விண்ணப்ப
நகலுடன்
கலந்து
கொள்ள
வேண்டும்.
Anonymous
November 16, 2022Publish