Friday, April 25, 2025
HomeBlogகால்நடை பராமரிப்புத் துறை வேலைவாய்ப்பு குறித்து தவறான தகவல் - ஆட்சியர் விளக்கம்
- Advertisment -

கால்நடை பராமரிப்புத் துறை வேலைவாய்ப்பு குறித்து தவறான தகவல் – ஆட்சியர் விளக்கம்

கால்நடை பராமரிப்புத் துறை வேலைவாய்ப்பு குறித்து தவறான தகவல் - ஆட்சியர் விளக்கம்

கால்நடை பராமரிப்புத் துறை வேலைவாய்ப்பு குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரவி வருவதாகவும், இதை யாரும் நம்பவேண்டும் என்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ. குமரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: புலனம் என்ற Whatsapp செயலி மூலம் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையிலுள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர், ஓட்டுநர் பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்ட்டுள்ளதாகவும், இப்பணியிடங்களுக்கு சம்பளம் முறையே ரூ. 15,000, ரூ. 13,000 எனவும், தகுதி, வயது ஆகியவை நிர்ணயிக்கப்பட்டு, 90 மணி நேரம் பயிச்சி அளித்து பணிநியமன ஆணை வழங்கப்படும்.

இதற்கான ஆணை வெளியிடப்படும்.விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்திடலாம். இந்த பணியிடங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் 160 பணியிடங்கள் (ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 5 பணியிடங்களுக்கு வீதம்) என்று வெளியிடப்பட்டுள்ளது.

இது தவறான தகவலாகும். இதன்  மூலம் பகிரப்படும் செய்திகள் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறைக்கு தொடர்பற்றவை. எனவே, யாரும் இந்த தவறான செயலியை பயன்படுத்த வேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -