2022 ஆசிரியர் தகுதித்
தேர்வுக்கு எப்படி விண்ணப்பிப்பது?
தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு
எப்போது நடத்தப்படும் என
ஆசிரியர் வேலை தேடும்
பி.எட்., மற்றும்
பிளஸ்-2 முடித்துவிட்டு ஆசிரியர்
பயிற்சி முடித்த லட்சக்கணக்கானவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
இந்த
நிலையில் 2022 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு
தாள் I மற்றும் தாள்
II-க்கு மார்ச் 14ம்
தேதி முதல் ஏப்ரல்
13ம் தேதி வரை
விண்ணப்பிக்கலாம் என
ஆசிரியர் பணியாளர் தேர்வு
வாரியம் தெரிவித்துள்ளது.
தேர்வின் பெயர்: ஆசிரியர்
தகுதித் தேர்வில்(டெட்)
தகுதிகள்:
தாள்-I: இதற்கு
அரசு அல்லது அரசு
அங்கீகாரம் பெற்ற கல்வி
நிலையங்களில் பிளஸ்
தேர்ச்சியுடன் இரண்டு
ஆண்டு ஆசிரியர் பயிற்சி
கல்வியை முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தாள்-II: அரசு
அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் இளநிலைப் பட்டம் பெற்று
பி.எட் முடித்தவர்கள், முதுநிலைப் பட்டம் பெற்று
பி.எட் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது: குறைந்தபட்ச 18 வயது
பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பு
கிடையாது.
கட்டணம்: பொதுப்பிரிவினர், எம்பிசி,
பிசி பிரிவினர் ரூ.500,
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர்
ரூ.250 செலுத்த வேண்டும்,
தேர்வுசெய்யப்படும் முறை: தேர்வில்
பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே தகுதியானவர்கள் தேர்வு
செய்யப்படுவர்.
தேர்வு நடைபெறும் நாள்: தாள்-I
ஜூன் 27 மற்றும் தாள்
– II ஜூன் 28 ஆம் தேதி
நடைபெறலாம் என கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பின்னர் வெளியாகும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: தமிழ்நாடு
ஆசிரியர் பணியாளர் தேர்வு
வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான
www.trb.tn.nic.in என்ற
இணையதளத்தின் மூலம்
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 13.04.2022
விவரங்கள் அறிய: Click Here