TAMIL MIXER
EDUCATION.ன் UPSC செய்திகள்
குடிமைப்பணி போட்டித் தேர்வுக்கு மீனவ
பட்டதாரிகளுக்கு
இலவசப்
பயிற்சி – திருநெல்வேலி
இந்திய குடிமைப் பணிக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளிக்கும் திட்டத்தில் சேர மீனவ பட்டதாரி இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை, சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி நிலையம் சார்பில் ஆண்டுதேர்றும்
20 கடல்
மற்றும்
உள்நாட்டு
மீனவ
பட்டதாரி
இளைஞா்களை
தேர்ந்தெடுத்து
இந்திய
குடிமைப்
பணிக்கான
போட்டித்
தேர்வில்
கலந்து
கொள்ள
ஏதுவாக
பிரத்யேக
பயிற்சி
அளித்திடும்
திட்டத்தை
செயல்படுத்திட
தமிழ்நாடு
அரசால்
ஆணை
வழங்கப்பட்டுள்ளது.
கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினா்கள்
மற்றும்
மீனவா்
நலவாரிய
உறுப்பினா்களின்
வாரிசு
பட்டதாரி
இளைஞா்கள்
இப்பயிற்சி
திட்டத்தில்
சேர்ந்து
பயன்பெறலாம்.
இத்திட்டத்தின்
கீழ்
பயிற்சி
பெற
விரும்புவோர்
விண்ணப்பப்படிவம்
மற்றும்
அரசு
வழிகாட்டுதல்களை
மீன்வளம்
மற்றும்
மீனவா்
நலத்துறையின்
இணையதளத்தில்
கட்டணமின்றி
பதிவிறக்கம்
செய்து
கொள்ளலாம்.
விண்ணப்பப்படிவங்களை
மீன்வளம்
மற்றும்
மீனவா்
நலத்துறை
துணை,
இணை
இயக்குநா்கள்,
மாவட்ட
மீனவளம்
மற்றும்
மீனவா்
நலத்துறை
உதவி
இயக்குநா்
அலுவலகங்களில்
அலுவலக
வேலை
நாள்களில்
இலவசமாக
பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பதாரா்
மீன்வளம்
மற்றும்
மீனவா்
நலத்துறை
இணையதளத்தில்
உள்ள
விரிவான
அரசு
வழிகாட்டு
நெறிமுறைகளின்படி
பூா்த்தி
செய்து
உரிய
ஆவணங்களுடன்
ராதாபுரம்,
மீன்வளம்
மற்றும்
மீனவா்
நலத்துறை
உதவி
இயக்குநா்
அலுவலகம்
மற்றும்
திருநெல்வேலி
மீன்வளம்
மற்றும்
மீனவா்
நலத்துறை
உதவி
இயக்குநா்
அலுவலகத்திற்கு
பதிவு
அஞ்சல்
மூலமாகவோ
அல்லது
நேரடியாகவோ
வரும்
31ம்(31.10.2022) தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.
மேலும், இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு
ராதாபுரம்
மீன்வளம்
மற்றும்
மீனவா்
நலத்துறை
உதவி
இயக்குநா்
அலுவலகம்,
திருநெல்வேலி
மீன்வளம்
மற்றும்
மீனவா்
நலத்துறை
உதவி
இயக்குநா்
அலுவலகங்களை
நேரில்
அணுகலாம்.