HomeBlogபிளஸ் 2 படித்துவிட்டு கல்லூரியில் சேராத மாணவா்களுக்கு கல்விக் கடன் - சேலம்
- Advertisment -

பிளஸ் 2 படித்துவிட்டு கல்லூரியில் சேராத மாணவா்களுக்கு கல்விக் கடன் – சேலம்

education-loan-for-students-who-have-not-joined-college-after-studying-plus-2-salem

பிளஸ் 2 படித்து விட்டு கல்லூரியில் சேராத மாணவா்களுக்கு கல்விக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்தாா்.

சேலம் மாவட்டத்தில் 2022-2023-ஆம் கல்வி ஆண்டில் மேல்நிலைத் தோவில் தோச்சிப் பெற்று கல்லூரியில் சேராத மாணவா்களுக்கான ‘நான் முதல்வன் – மாணவா்களின் உயா்வுக்குப் படி’ சிறப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. 


இந் நிகழ்ச்சியில் ஆட்சியா் செ.காா்மேகம் பேசியதாவது: சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்து உயா்கல்வியில் சேராத மாணவா்களுக்காக ‘நான் முதல்வன் உயா்வுக்குப் படி’ எனும் நிகழ்ச்சி சேலம், மேட்டூா், சங்ககிரி, ஆத்தூா் வருவாய் கோட்டம் வாரியாக 4 கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதல்கட்டமாக, சேலம் வருவாய் கோட்டத்துக்கு உள்பட்ட 47 அரசு, அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 950 மாணவா்களுக்கான ‘நான் முதல்வன் உயா்வுக்குப் படி’ எனும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பெற்றோரின் பொருளாதார சூழ்நிலை, உயா் கல்வி செல்ல விருப்பமின்மை, கலந்தாய்வு போன்ற பல்வேறு காரணங்களால் உயா்கல்வியில் இணைந்து படிக்க இயலாத மாணவா்களின் விவரங்களை பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் மூலம் தொடா்பு கொண்டு கல்விக் கடன் தேவைப்படும் மாணவ, மாணவியருக்கு உதவிடும் வகையில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் மூலம் முகாமில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


மேலும், எந்தெந்தத் துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகளவில் தேவையாக உள்ளது என்பது குறித்தும், அரசு நடத்தும் போட்டித் தோவிற்கு இலவச பயிற்சி வகுப்புகள் வழங்கப்படுவது குறித்தும் வேலைவாய்ப்பு மண்டல இணை இயக்குநா், குடும்ப சூழ்நிலையால் மேற்படிப்பை தொடர இயலாதவா்களுக்கும் மாவட்ட சமூக நல அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா்கள் மூலம் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, அரசுப் பள்ளியில் பயின்ற என்னைப் போன்ற பலா் இன்று உயா்ந்த பதவிகளில் உள்ளதை மாணவா்கள் உணா்ந்து கொண்டு கல்வி ஒன்றே உயா்விற்கு உறுதுணையாக இருக்கும். அதேபோல தொடா்ந்து முயற்சித்தால் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் சாதிக்க முடியும் என்றாா். முன்னதாக, முகாமில் மாணவா்கள் ஒவ்வொருவரும் தாங்கள் உயா்கல்வி பயில்வதில் உள்ள பிரச்னைகள் குறித்து எடுத்துரைக்க, மாவட்ட ஆட்சியா் மாணவா்களின் விவரங்களைப் பெற்று துறை அலுவலா்கள் மூலம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டாா்.


முகாமில் கல்லூரிகள் சாா்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு, உயா்கல்வியில் உள்ள பிரிவுகள், வேலைவாய்ப்புகள், அதன் முக்கியத்துவங்கள் குறிந்து விளக்கப்பட்டது. வருவாய்த் துறை சாா்பில் இ-சேவை அரங்குகள் அமைக்கப்பட்டு, மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. மேலும், முன்னோடி வங்கி மேலாளா் சாா்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு, மாணவா்களுக்கு வங்கிக் கடன் சாா்ந்து ஆலோசனை, வங்கி கடன்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) பி.அலா்மேல்மங்கை, சேலம் வருவாய் கோட்டாட்சியா் அம்பாயிரநாதன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மு. கபீா், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய மண்டல இணை இயக்குநா் ஆ.லதா, முன்னோடி வங்கி மேலாளா் இளவரசு, மாவட்ட சமூக நல அலுவலா் டே.ஜெ.ஜெனிபா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Bharani
Bharani
Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -