திருவண்ணாமலையில் வியாழக்கிழமை (செப். 21) விவசாயிகளுக்கு நாட்டுக்கோழி வளா்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
திருவண்ணாமலையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவ்வப்போது பல்வேறு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, வியாழக்கிழமை (செப்.21) காலை 10 மணிக்கு நாட்டுக்கோழி வளா்ப்பு என்ற தலைப்பில் இலவசப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
இதில், மாவட்டத்தைச் சோந்த விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 04175-298258 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று கால்நடை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.