தமிழகத்தில் மீண்டும்
ஊரடங்கு
– வதந்திகளை
நம்ப
வேண்டாம்
கடந்த
10 நாட்களாக மீண்டும் கொரோனா
தொற்றின் இரண்டாம் அலை
வேகமாக தமிழகத்தில் பரவி
வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி,
கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது. தொற்றின் தாக்கத்தை குறைப்பதற்காக தமிழகத்தில் தொடர்ந்து நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மீண்டும் முழு ஊரடங்கு
அறிவிக்கப்பட உள்ளது
என்ற தகவல் சமூக
வலைத்தளங்களில் பரவி
வருகிறது.
இது
குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியது:
கொரோனா
பாதிப்பு அதிகரித்து வருவதால்
கட்டுப்பாடுகளை அதிகரிக்க
அரசு ஆலோசித்து வருகிறது.
தமிழகத்தில் முழு ஊரடங்கு
வரப்போகிறது, இரவு நேர
ஊரடங்கு வரப்போகிறது என்று
பரவும் தகவல்களை யாரும்
பரப்ப வேண்டாம். இது
முற்றிலும் வதந்தி.