முதலாமாண்டு மாணவர்களுக்கான
வகுப்புகள்
தொடங்கும்
தேதி
அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்
உள்ள
ஒரு
லட்சத்து
7 ஆயிரத்து
395 இளநிலை
பட்டப்படிப்புகளில்
சேர
3 லட்சத்திற்கும்
அதிகமான
மாணவ,
மாணவிகள்
விண்ணப்பித்துள்ளனர்.
இதனால் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு
கேட்ட
பாடப்பிரிவுகள்
கிடைக்க
வாய்ப்புள்ளது.
தமிழ் மொழி பட்டபடிப்புக்கு
தமிழ்
மொழியில்
பயின்றவர்களுக்காக
தனி
தரவரிசை
பட்டியலும்,
ஆங்கில
மொழி
பட்டபடிப்புக்கு
ஆங்கில
பாடத்தில்
பெற்ற
மதிப்பெண்கள்,
பிற
இளநிலை
பட்டபடிப்புகளுக்கு
மற்ற
4 பாடங்களில்
பெற்ற
மதிப்பெண்கள்
அடிப்படையில்
தனி
தரவரிசை
பட்டியலும்
வெளியிடப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள்,
விளையாட்டு
வீரர்
உள்ளிட்டோருக்கான
கலந்தாய்வு
கடந்த
29ம்
தேதி
தொடங்கி
நேற்று
முன்தினம்
(மே
31ம்
தேதி)
வரை
நடைபெற்றது.
இந்த நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்
மாணவர்
சேர்க்கைக்கான
பொதுப்பிரிவு
கலந்தாய்வு
தொடங்கியது.
இளநிலை
படிப்புகளில்
1,07,299 இடங்களுக்கு
சுமார்
2.46 லட்சம்
பேர்
விண்ணப்பித்துள்ளனர்.
3
நாட்கள்
நடைபெற்ற
சிறப்பு
பிரிவு
கலந்தாய்வில்
3,363 பேர்
இடங்களை
தேர்வு
செய்தனர்.
ஆன்லைனில்
தொடங்கிய
முதல்கட்ட
பொதுப்பிரிவு
கலந்தாய்வு
நேற்று
முன்தினம்
1-ம்
தேதி
முதல்
10-ம்
தேதி
வரையும்,
வரும்
12ம்
தேதி
முதல்
20ம்
தேதி
வரை
2ம்
கட்ட
கலந்தாய்வும்
நடைபெறவுள்ளது.
வரும்
22ம்
தேதி
முதலாம்
ஆண்டு
மாணவர்களுக்கான
வகுப்புகள்
தொடங்கும்.