TAMIL MIXER
EDUCATION.ன்
உதவித்தொகை செய்திகள்
உயர்கல்வியை தொடர்வதற்கான
SEEEDS உதவித்தொகை
அரசு மற்றும் அரசு உதவி பெறக்கூடிய பள்ளியில் படித்த தாழ்த்தப்பட்ட
சமூகத்தை
சேர்ந்த
அதிக
மதிப்பெண்
பெற்ற
மாணவ–மாணவியர்களுக்கு
சீட்ஸ்
(SEEDS) சேவையின்
வாயிலாக
பல
உதவித்தொகை
வழங்கப்பட்டு
வருகிறது.
சென்ற 2022ம் வருடத்தில் மட்டும் தமிழகத்தில் சீட்ஸ் (SEEDS) உதவித்தொகையை
பெற
1500க்கும்
அதிகமான
மாணவர்கள்
விண்ணப்பித்து
இருந்தனர்.
அதேபோன்று நடப்பு ஆண்டு 12ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, பாலிடெக்னிக்,
டிப்ளமோ,
கலை
மற்றும்
அறிவியல்
கல்லூரிகளில்
பயிலும்
மாணவ–மாணவியர்கள் சீட்ஸ் (SEEEDS) உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு இந்த சீட்ஸ் உதவித்தொகை பெற தகுதி குறித்தான பட்டியலும் இப்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி,
12ம்
வகுப்பில்
குறைந்தது
80 சதவீதம்
மதிப்பெண்
பெற்ற
மாணவர்கள்
இந்த
உதவி
தொகைக்கு
விண்ணப்பிக்க
முடியும்.
அதோடு
பொறியியல்
பிரிவில்
480க்கும்
மேற்பட்ட
மதிப்பெண்(அ) 180க்கும் மேற்பட்ட கட்ஆப் பெற்ற மாணவர்கள் இந்த உதவித்தொகைக்கு
விண்ணப்பிக்கலாம்.
அடுத்ததாக அரசு மருத்துவ கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தவர்கள்
மற்றும்
நீட்தேர்வில்
500க்கும்
மேற்பட்ட
மதிப்பெண்
பெற்றவர்களும்
இந்த
உதவித்
தொகைக்கு
விண்ணப்பிக்கலாம்
என்று
அறிவிக்கப்பட்டு
உள்ளது.
அதுமட்டுமல்லாமல்
கட்
ஆப்
180க்கும்
அதிகமான
மதிப்பெண்
பெற்ற
துணை
மருத்துவர்களும்,
480க்கும்
மேற்பட்ட
மதிப்பெண்
பெற்ற
கலை,
அறிவியல்
அல்லது
பிற
படிப்பு
பயிலும்
மாணவர்களும்,
10ம்
வகுப்பில்
350க்கும்
அதிகமான
மதிப்பெண்
பெற்று
பாலிடெக்னிக்
பயிலும்
மாணவர்களும்
இந்த
உதவித்தொகைக்கு
விண்ணப்பிக்கலாம்
என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர பட்டதாரி உயர் படிப்பை தொடர்வதற்கான
இந்த
உதவித்தொகையை
பெற
மாணவர்கள்
https://www.seeds.org (அ) https://www.seeeds.org/scholarship
என்ற
ஆன்லைன்
இணையதளம்
முகவரி
பக்கத்தின்
வாயிலாக
வருகிற
மே
28ம்
தேதிக்குள்
விண்ணப்பிக்கும்படி
அறிவுறுத்தப்பட்டு
உள்ளது.