ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு தாட்கோ மூலம் வழங்கப்படும் அரசுப் பணி தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு தகுதியுடைவா்கள் விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு தாட்கோ மூலம் வழங்கப்படும் அரசுப் பணி தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு தகுதியுடைவா்கள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் சு.அமிா்த ஜோதி வெளியிட்டுள்ள செய்தி: மத்திய அரசு பணியாளா் தேர்வு ஆணையம் ( எஸ்.எஸ்.சி.) நடத்தும் 2023- ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை https://ssc.nic.in/ என்ற அதிகாரபூா்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 11,000 காலிப் பணியிடங்கள் இத்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. மூன்று முறைகளில் நடைபெற உள்ள இத்தேர்வில் வெற்றி பெற்றவா்களுக்கு தொடக்க கால மாத ஊதியம் ரூ.18,000 முதல் ரூ.22,000 வரை வழங்கப்படுகிறது. இந்தத் தேர்வுக்கான பயிற்சியை தாட்கோ நிறுவனம், ‘வராண்டா ரேஸ்’ என்ற தனியாா் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு இலவமாக வழங்குகிறது.
18 முதல் 32 வயது வரை உள்ள பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த மாணவ, மாணவிகள் பயிற்சியில் சேர ஜ்ஜ்ஜ்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சிக் கட்டணம் முழுவதையும் தாட்கோ நிறுவனம் வழங்கும். கூடுதல் தகவல்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள தாட்கோ அலுவலகம் அல்லது 044-25246344 எனும் தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.