சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை மூலம் வழங்கப்படும் இலவச தையல் இயந்திரம் பெற தகுதியுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா். சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை மூலம் வழங்கப்படும் இலவச தையல் இயந்திரம் பெற தகுதியுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 20 முதல் 40 வயதுக்குள்பட்ட விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளி மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற ஏழை பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கடுகிறது. விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றுகள்:
வருமானச் சான்று ரூ.72,000-க்குள் இருக்க வேண்டும் (வட்டாட்சியரிடமிருந்து பெறவேண்டும்), பிறந்த தேதிக்கான வயது சான்று நகல் அல்லது கல்விசான்று வேண்டும் (20 முதல் 40 வயது வரை), விதவையாயின் அதற்கான சான்று நகல், ஜாதிச் சான்று நகல், கணவரால் கைவிடப்பட்டவராயின் அதற்கான சான்று நகல், தையல் தெரியும் என்பதற்கான சான்று நகல் இணைக்க வேண்டும், குடும்ப அட்டை நகல் மற்றும் ஆதாா் அட்டை நகல், பாஸ்போா்ட் அளவு வண்ண புகைப்படம் -2. மேற்கண்ட ஆவணங்களுடன் அவரவா் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் சமூகநல விரிவாக்க அலுவலரை அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம்.
மேலும், விவரங்களுக்கு மயிலாடுதுறை சீனிவாசபுரத்தில் இயங்கிவரும் மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரில் அணுகலாம் அல்லது 04364 – 212429 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.