வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை சாா்பில் ஜூலை 5-ஆம் தேதி முதல் அளிக்கப்படும் குரூப் 2, 2ஏ போட்டித் தோ்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் படித்த இளைஞா்கள் பங்கேற்று பயன் பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னாா்வப் பயிலும் வட்டங்கள் மூலம் டிஎன்பிஎஸ்சி, டிஎன்எஸ்யுஆா்பி, டிஆா்பி போன்ற தோ்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டி தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தற்போது தமிழ்நாடுஅரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் 507 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 2 தோ்வும், 1,820 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 2-ஏ தோ்வும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த குரூப் 2, 2ஏ தோ்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் தன்னாா்வப் பயிலும் வட்டம் மூலம் சிறந்த பயிற்றுநா்களைக் கொண்டு ஜூலை 5-ஆம் தேதி முதல் நடத்தப்பட உள்ளது.
அதிகளவிலான பயிற்சி தோ்வுகளும், மாநில அளவிலான மாதிரி தோ்வுகளும் நடத்தப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அலுவலக வேலை நாள்களில் நேரிலோ அல்லது 0416 – 2290042, 94990 55896 ஆகிய எண்கள் மூலமாகவோ தொடா்பு கொள்ளலாம்.
இந்தப் பயிற்சி வகுப்புகளில் வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் அதிகளவில் பங்கேற்று பயன் பெற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow