TAMIL MIXER
EDUCATION.ன்
CBSE
செய்திகள்
+2 தேர்வு
முடிவுகள் வெளியான நிலையில்;
இன்று
தொடங்கும்
உளவியல்
ஆலோசனைக்கு அழைப்பு எண் வெளியாகியுள்ளது
சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் மே 12 வெளியான நிலையில், மே 13 முதல் மாணவர்களுக்கான
உளவியல்
ஆலோசனை
தொடங்கி
உள்ளதாக
நிர்வாகம்
அறிவித்துள்ளது.
மே 27ஆம் தேதி வரை செயல்படும் இந்த ஆலோசனை மையத்துக்கு, மாணவர்கள் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை தொடர்புகொள்ளலாம்.
இதுகுறித்து சிபிஎஸ்இ ஊடகப் பிரிவு இயக்குநர் ரமா சர்மா இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:
சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான
உளவியல்
ஆலோசனை
இன்று
(மே
13) தொடங்கி
உள்ளது.
திங்கள்
முதல்
சனிக்கிழமை
வரை,
மாணவர்கள்
காலை
9.30 மணி
முதல்
மாலை
5.30 மணி
வரை
தொடர்புகொள்ளலாம்.
கடந்த 25 ஆண்டுகளாக பெற்றோர்களுக்கும்
மாணவர்களுக்கும்
தேர்வு
குறித்தும்,
தேர்வு
முடிந்தபிறகும்
2 கட்டங்களாக
ஆலோசனை
வழங்கப்பட்டு
வருகிறது.
2ஆம் கட்ட தொலைபேசி ஆலோசனை மையத்தில், பள்ளி முதல்வர்கள், பயிற்சி பெற்ற உளவியலாளர்கள்,
சிறப்பு
கல்வி
ஆலோசகர்கள்
59 பேர்
பங்கேற்று,
உளவியல்
ஆலோசனைகளை
வழங்க
உள்ளனர்.
இவர்கள்
அரசு
அங்கீகாரம்
பெற்ற
அரசு
மற்றும்
தனியார்
பள்ளிகளைச்
சேர்ந்தவர்களாக
இருப்பர்.
இதில் 53 பேர் இந்தியாவில் இருந்தும் 6 பேர் ஐக்கிய அரசு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய வெளிநாட்டில்
இருந்தும்
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக
இருப்பர்.
மாணவர்கள் 1800-11-8004
என்ற
எண்ணை
அழைத்து
உளவியல்
ஆலோசனை
பெறலாம்.
இந்தியா
முழுவதிலும்
இருந்தும்
எங்கிருந்து
வேண்டுமானாலும்
மாணவர்கள்
இந்த
எண்ணைத்
தொடர்பு
கொள்ளலாம்.