- Advertisment -

தமிழ்

work 102 Tamil Mixer Education

தமிழ்

  1. தமிழ்நாட்டில் வடமொழியை
    எழுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டது என்ன எழுத்து
    முறை? கிரகந்த எழுத்து
  2. சங்கம் என்ற
    சொல்லை முதன் முதலில்
    பயன்படுத்தியவர் யார்?
    சீத்தலைச் சாத்தனார்
  3. தமிழ் நிலைபெற்ற
    தாங்கரு மரபின்என்னும்
    வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
    எது? சிறுபாணாற்றுப்படை
  4. பல புலவர்கள்
    பாடிய பாடல்களைக் கொண்ட
    நூல் என்பதை குறிப்பது?
    தொகை
  5. நற்றிணையில் கடவுள்
    வாழ்த்துப் பாடல் யாரை
    பற்றியது? திருமால்
  6. யாய்என்பதன்
    பொருள் யாது? என் தாய்
  7. பத்து+பத்து
    சேர்ந்தால் பதிற்றுப்பத்து ஆகும்
    என்று கூறிய நூல்
    எது? நன்னூல்
  8. உலகின் தோற்றம்
    குறித்து கூறும் நூல்
    எது? பரிபாடல்
  9. எடா, ஏடீ
    என்ற விளிச்சொற்கள் இடம்பெற்ற
    ஒரே சங்க நூல்
    எது? கலித்தொகை
  10. பண்டைத் தமிழர்
    திருமணம் குறித்துக் கூறும்
    நூல் எது? அகநானூறு
  11. பத்துப்பாட்டு, திருமுறைகள் என்னும் இத்தொகுப்பில் இடம்
    பெற்ற ஒரே நூல்
    எது? திருமுருகாற்றுப்படை
  12. பௌத்தப்பள்ளி, அந்தணர்
    பள்ளி, அமண் பள்ளி
    பற்றிக் கூறும் நூல்
    எது? மதுரைக் காஞ்சி
  13. புகார் நகரத்தில்
    நடைபெற்ற வணிகத்தைப் பற்றி
    விரிவாகக் கூறும் நூல்
    எது? பட்டினப்பாலை
  14. பண்டைய இசைக்
    கருவிகள் பற்றி மிகுதியாகக் கூறும் நூல் எது?
    மலைபடு கடாம்
  15. துன்பம் கொடுக்கும் செயல்களைத் தொகுத்துக் கூறும்
    நூல் எது? இன்னா நாற்பது
  16. பதினெண் கீழ்கணக்கில் உள்ள அக நூல்கள்
    ஆறனுள் மிகச் சிறியது
    எது? கார் நாற்பது
  17. திணை மாலை
    நூற்றைம்பது என்னும் நூலின்
    ஆசிரியர் யார்? கணிதமேதாவியார்
  18. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த இந்தியர்
    யார்? கே.எம்.பாலசுப்பிரமணியம்
  19. மகடூஉ முன்னிலை
    உடைய நீதிநூல் எது?
    நன்னெறி
  20. பெண்ணின் பெருமை
    பேசும் நூல் எது?
    பெண்மதி மாலை
  21. ஐம்பெருங்காப்பியங்கள் என்ற
    தொடரை முதன் முதலில்
    கூறியவர் யார்? மயிலைநாதர்
  22. இளங்கோவடிகள் துறவு
    பூண்டு அமர்ந்த இடம்
    எது? குணவாயிற்கோட்டம்
  23. மாதவியின் இரண்டாம்
    கடிதத்தை கோவலனிடம் சேர்த்தவன் யார்? கோசிகமாணி
  24. கொங்குவேள் மாக்கதை
    என்னும் பெயர் கொண்ட
    நூல் எது? பெருங்கதை
  25. ஆதி உலா
    என்ற திருக்கயிலாய நாதர்
    உலாவைப் பாடியவர் யார்?
    சேரமான் பெருமாள் நாயனார்
  26. இறைவன் பாவை
    பாடியவாயல் கோவை பாடுக
    என மாணிக்கவாசகர் பாடியது?
    திருக்கோவையார்
  27. சைவசித்தாந்தம்என்ற
    தொடர் முதன் முதலில்
    இடம்பெற்ற நூல் எது?
    திருமந்திரம்
  28. அகத்தியர் பாடிய
    சித்தர் பாடல்கள் எவ்வாறு
    வழங்கப்படுகிறது? ஞானப் பாமாலை
  29. கந்தர் அனுபூதி
    சொன்ன எந்தைஎன்று
    தாயுமானவர் யாரை போற்றினார்? அருணகிரியார்
  30. 1967-ம்  ஆண்டு தமிழ்
    இசைச்சங்கம்இசைப் பேரறிஞர்
    என்ற விருதை யாருக்கு
    அளித்தது? கிருபானந்தவாரியார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -