மதுரையில் தனியார் இ-சேவை மையம் அமைக்க மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மதுரையில் வருவாய் கிராமங்கள் தோறும் தனியார் இ-சேவை மையம் அமைக்க மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்றும், மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் இ-சேவை மையம் அமைக்க உரிமம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் www.tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.