காஞ்சிபுரம் இந்தியன் வங்கியின், சுயதொழில் பயிற்சி நிறுவனம் சார்பில், இருபாலருக்கான, ‘சிசிடிவி’ கேமரா பொருத்துதல் மற்றும் சர்வீஸ் குறித்த, 13 நாட்கள் இலவச பயிற்சி துவக்கப்பட உள்ளது.இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.
இதில், 18 – 45 வயதிற்கு உட்பட்ட, 8ம் வகுப்பும் அதற்கு மேலும் படித்தவர்கள் சேரலாம்.கையேடு, பயிற்சி உபகரணம் இலவசம். சான்றிதழும் வழங்கப்படும். காலை 9:30 மணி முதல், மாலை 5:30 மணி வரை பயிற்சி அளிக்கப்படும்.விருப்பமுள்ளவர்கள், இந்தியன் வங்கி சுயதொழில் பயிற்சி மையம், 32ஏ, வரதராஜ பெருமாள் சன்னிதி தெரு, சின்ன காஞ்சிபுரம்,- 631 501 என்ற முகவரிக்கு நாளைக்குள் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.இதேபோல, மெழுகுவர்த்தி, அகர்பத்தி தயாரிப்புக்கான பயிற்சி வகுப்பும் துவங்கப்பட உள்ளது. விபரங்களுக்கு 044 – 2726 8037 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.