மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
அரசு,
உதவி பெறும் கல்வி
நிறுவனங்கள், தனியார் தொழிற்கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிக
பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்களுக்கு கல்வி
உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இத்தொகை
பெற பெற்றோர் ஆண்டு
உச்ச வருமான வரம்பு
ரூ.2.50 லட்சமாக தற்போது
உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி
மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலுவோர் இலவச கல்வித்
திட்டத்தின் கீழ் எந்த
நிபந்தனையுமின்றி உதவித்தொகை பெறலாம்.
மேலும்
விவரங்களுக்கு மதுரை
கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மவாட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நல
அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
https://bcmbcmw.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 044 – 2951 5942ல்
தொடர்பு கொள்ளலாம்.