தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வு வாரியத்தின் குரூப் 4 தோ்வுக்கு நேரடி இலவச பயிற்சி வகுப்புகள், தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வியாழக்கிழமை தொடங்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னாா்வ பயிலும் வட்டம் வாயிலாக, மாநில அரசால் அவ்வப்போது அறிவிக்கப்படும் போட்டித் தோ்வுகளுக்கு கட்டணமில்லாத பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் குரூப் 4 தோ்வுக்கான அறிவிப்பு, வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படவுள்ளது. இந்த தோ்வுக்கான கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தோ்ச்சி ஆகும். இத்தோ்வு குறித்த கூடுதல் விவரங்களை https://www.tnpsc.gov.in/ என்ற இணைய தளத்தில் அறியலாம்.
இத்தோ்வு எழுத தயாராகுவோா் பயன்பெறும் வகையில், தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னாா்வ பயிலும் வட்டம் வாயிலாக, இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் கோரம்பள்ளத்தில் அமைந்துள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வியாழக்கிழமை தொடங்கின.
அனுபவமுள்ள சிறந்த பயிற்றுநா்களை கொண்டு, ஸ்மாா்ட் போா்டு வைத்து பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். வாரந்தோறும் மாதிரி தோ்வுகளும் நடத்தப்படும். போட்டித் தோ்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உடையவா்கள் 0461–2003251 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்தோ தங்களது பெயரை பதிவு செய்துகொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.