தென்னிந்திய உணவு வகைகளில் தவிர்க்க முடியா உணவு இட்லி. மேலும், இட்லி அதிக ரசிகர்களை கொண்ட உணவும் கூட. அந்த வகையில், சூடான இட்லி, சட்னி, சாம்பார் வினியோகிக்கும் ஏடிஎம் ஒன்றின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புதிய வகை உணவு ஏடிஎம் பெங்களூரில் வைக்கப்பட்டுள்ளது. நாம் வழக்கமாக சென்று பணம் எடுக்கும் ஏடிஎம் போலவே குளிர்சாதன அறையில் இந்த ஏடிஎம் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த இயந்திரங்களுக்கு அருகில் QR Code வைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் அந்த கோடை ஸ்கேன் செய்ய வேண்டும். பின்னர் தங்கள் விரும்பும் வகை இட்லியை அதில் பதிவேற்றி ஆர்டர் செய்யவேண்டும். இட்லி, சாம்பார், சட்னி, மற்றும் இட்லி மிளகாய் பொடி ஆகியவையுடன் இந்த இயந்திரத்தில் இட்லி பெற்றுக்கொள்ளலாம்.
Idli ATM in Bangalore… pic.twitter.com/NvI7GuZP6Y
— B Padmanaban (padmanaban@fortuneinvestment.in) (@padhucfp) October 13, 2022