ஒரு வருடகால பயிற்சி பெற பொறியாளர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு, பொதுப்பணித் துறை, தொழிற் பழகுநர் வாரியம் (தென் மண்டலம்) ஒத்துழைப்புடன், 2020, 2021 மற்றும் 2022 ஆகிய வருடங்களில் தமிழ்நாட்டிலிருந்து, பட்டம் மற்றும் பட்டய ஆகிய பிரிவுகளில் தேர்ச்சியுற்ற பொறியாளர்களிடமிருந்து பயிற்றுனர் சட்டங்களின்படி ஒரு வருடகால பயிற்சி பெற நிகழ்நிலை விண்ணப்பங்கள் (Online Application) வரவேற்க்கப்படுகின்றன.
மேலும், விவரங்களுக்கு www.boat-srp.com எனும் இணையதள முகவரியினைக் காணவும். நிகழ்நிலை விண்ணப்பங்கள் (Online Application) பெற கடைசி நாள் 06.03.2023 ஆகும்.