Tuesday, August 5, 2025

இ-பொது சேவை மையம் வைத்து சுயமாக சம்பாதிப்பது எப்படி?

இ-பொது சேவை மையம் வைத்து சுயமாக சம்பாதிப்பது எப்படி?
இ-பொது சேவை மையம் வைத்து சுயமாக சம்பாதிப்பது எப்படி?
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இ-பொது சேவை மையம் நடத்தி வரும் எஸ்.இமயவர்மன் கூறியதாவது:
சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் உள்பட 21 வருவாய்த் துறை ஆவணங்களைப் பெற இணையம் மூலம் விண்ணப்பித்து பெற அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்காக பொதுமக்கள் இ-பொது சேவை மையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த மையத்தை நடத்துவதன் மூலம் படித்த இளைஞர்கள் சுய வேலைவாய்ப்பு பெற்று நல்ல வருமானம் பெறலாம்.
ஜி.எஸ்.டி. பதிவு செய்தல், வருமான வரித் தாக்கல் உள்ளிட்ட சேவைகளையும் கணினியைக் கொண்டு இணையம் வழியே செய்து கொடுத்து சேவையுடன் வருமானம் ஈட்டலாம். மத்திய அரசின் இ-பொது சேவை மையத்தைத் தொடங்க விரும்புவோர் www.digitalseva.csc.gov.in  என்ற இணையதளத்தில் ஆதார் அட்டை, PAN அட்டை, வங்கிக் கணக்கு விவரம் ஆகியவற்றைக் கொண்டு பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த 10 முதல் 15 நாள்களுக்குள் இ-பொது சேவை மையம் தொடங்குவதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கிவிடும்.
இதற்கு ஒரு கணினி, இணையதள வசதி, பிரிண்டர், கைவிரல் ரேகை பதிவு செய்யும் பயோ-மெட்ரிக் கருவி ஆகியவையும், சேவை மையம் நடத்த போதிய இடவசதியும் இருந்தால் போதும். நீங்கள் தேர்வு செய்யும் இடம் மத்திய-மாநில அரசு அலுவலகங்கள் இயங்கும் இடமாகவோ, இணைய வழி சேவைகளை அதிகம் நாடும் பொதுமக்கள் கூடும் இடமாகவோ இருந்தால் நல்லது.
மின் கட்டணம் செலுத்துதல், பயிர்க் காப்பீடு செய்தல், இரு சக்கர வாகனக் காப்பீடு, தனிநபர் காப்பீடு, ஓய்வூதியத் திட்டப் பதிவு, ரயில் பயணச்சீட்டு முன்பதிவு ஆகியவற்றையும் செய்து கொடுக்கலாம்.
ஜி.எஸ்.டி., வருமான வரி தாக்கல் தொடர்பாக இணையவழி பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. அதில் பயிற்சி பெற்று ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றையும் பதிவு செய்து கொடுக்கலாம். ஆங்கிலம் பேச்சுப் பயிற்சி, அடிப்படை கணினிப் பயிற்சிகள், டி.டி.பி., டி.சி.ஏ., பி.ஜி.டி.சி.ஏ., டேலி. உள்ளிட்ட கணினிப் பயிற்சிகளுக்கான மத்திய அரசின் பயிற்சி ஏடுகள் இ-பொது சேவை மையம் தொடங்குபவர்களுக்கு வழங்கப்படும். இதைக் கொண்டு உள்ளூர் மாணவ, மாணவிகளுக்குப் பயிற்சி வகுப்புகளை நடத்தலாம். இணையவழியில் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு மத்திய அரசின் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
பொருளாதாரக் கணக்கெடுப்பு நடத்த இ-பொது சேவை மையத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. எனவே, இ-பொது சேவை மையம் வைத்துள்ளவர்கள் 10 பேரை நியமித்து கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடலாம்.
For more Details: 7200941541 

      Important Notes

      6-12th பாரதிதாசன் பற்றிய அனைத்து தொகுப்பு PDF

      TNPSC, SSC, மற்றும் அரசு தேர்வுகளுக்கான "பாரதிதாசன் பற்றிய அனைத்து தொகுப்பு...

      TRB MATHS UNIT 1 TO 10 STUDY MATERIAL 2025 (GOVERNMENT OF TAMILNADU)

      TRB Maths Study Material for Units 1 to 10...

      இலக்கியம் – பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள்

      இலக்கியம் - பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள் TNPSC மற்றும்...

      TNPSC Group 4 Official Answer Key 2025

      TNPSC Group 4 Official Answer Key 2025

      தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

      வேலுநாச்சியார் (1730 - 1796):தில்லையாடி வள்ளியம்மை:பத்மாசனி அம்மாள்:கேப்டன் இலட்சுமி:டி.எஸ்‌.சௌந்திரம்:ருக்மணி லட்சுமிபதி:மூவலூர் இராமாமிர்தம்...

      Topics

      🔥 தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஜூனியர் பைண்டர் வேலைவாய்ப்பு 2025 – விண்ணப்பிக்க கடைசி நாள் அறிவிப்பு! ✍️

      தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறையில் 05 ஜூனியர் பைண்டர் (SC/ST) பணியிடங்கள் 2025 – SSLC மற்றும் பைண்டர் தொழிற்சான்றிதழுடன் விண்ணப்பிக்கலாம்! விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.08.2025.

      📝 தமிழ்நாடு வழக்குத் துறை அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025 – 16 காலியிடங்கள் அறிவிப்பு!

      Tamil Nadu Legal Department Recruitment 2025 – Office Assistant பதவிக்கு 16 காலியிடங்கள். 8வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.08.2025.

      🏥 தஞ்சாவூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – 131 Nurse, Lab Technician, Pharmacist பணியிடங்கள் அறிவிப்பு!

      தஞ்சாவூர் DHS வேலைவாய்ப்பு 2025 – Nurse, Lab Technician, Pharmacist உள்ளிட்ட 131 காலியிடங்கள். விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.08.2025. 8th, 12th, Nursing, Pharmacy தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

      📢 பெரம்பலூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Nurse, Pharmacist, Lab Technician பணியிடங்கள் அறிவிப்பு!

      பெரம்பலூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Nurse, Pharmacist, Lab Technician உள்ளிட்ட 30 காலியிடங்கள்! விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.08.2025. 8th, 12th, Nursing, Pharmacy தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

      📢 நாகப்பட்டினம் வருவாய்த்துறை வேலைவாய்ப்பு 2025 – Village Assistant பணிக்கு உடனே விண்ணப்பிக்கலாம்!

      நாகப்பட்டினம் வருவாய்த்துறை வேலைவாய்ப்பு 2025 – Village Assistant பதவிக்கு 5 காலியிடங்கள் அறிவிப்பு! விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.08.2025. 10th தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

      🏥 நாகப்பட்டினம் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Nurse, Lab Technician & Pharmacist பணியிடங்கள் அறிவிப்பு!

      நாகப்பட்டினம் மாவட்ட நல்வாழ்வு சங்கம் 2025 வேலைவாய்ப்பு அறிவிப்பு – Nurse, Lab Technician, Pharmacist, MTS பதவிகள்! விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.08.2025.

      🌸 கன்னியாகுமரி அரசு குழந்தைகள் இல்லம் வேலைவாய்ப்பு 2025 – Counsellor (Women) பணியிடம் அறிவிப்பு!

      கன்னியாகுமரி அரசு குழந்தைகள் இல்லத்தில் Counsellor (Women) பணிக்கு வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.08.2025.

      📝 காஞ்சிபுரம் சமூக நல அலுவலக வேலைவாய்ப்பு 2025 – Gender Specialist, IT Assistant பணியிடங்கள் அறிவிப்பு!

      காஞ்சிபுரம் சமூக நல அலுவலகத்தில் 4 Gender Specialist, IT Assistant பணியிடங்கள் அறிவிப்பு 2025 வெளியானது. விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.08.2025.

      Related Articles

      Popular Categories