12th Standard Tamil Book Back Questions Blog book back questions

12th Tamil – Lesson 4 – செல்வத்துள் எல்லாம் – New Book Back Question & Answers

12th tamil lesson 3 selvaththul ellam new book back question answers 479246585 Tamil Mixer Education

 

download2Bbutton 6 Tamil Mixer Education

கற்பவை கற்றபின்

1.
கீழ்க்காணும் ஈற்றடிகளைக் கொண்டு நேரிசை  ()
இன்னிசை வெண்பா எழுதுக.

)
என்றும் விரும்பியே கல்.

விடை: உலகில் உத்தமனாய்
வாழ கல்வி

எத்திக்கும் உன்
புகழை நாட்ட

ஏற்றமிகு கல்வியை
கசடற கற்று

என்றும் விரும்பியே கல்

)
ஒழுக்கம் உயர்வு தரும்.

விடை: உயிரை விட
மேலானது ஒழுக்கம்

தயிரை விட
மென்மையானது ஒழுக்கம்

பழகும் முறை
அறிந்து வாழ்ந்தால்

ஒழுக்கமே உயர்வு
தரும்.

)
இன்னல் விலகி விடும்.

விடை: அன்பினால் அறம்
பல செய்து

பண்பினால் பல
புகழ் எய்து

உண்மை யினால்
உழைத்துநீ வாழ்ந்தால்

இன்னல் விலகி
விடும்.

)
உழவின்றி உய்யா உலகு.

விடை: கோலும் குடையும்
மன்னனுக்கு அவசியம்

எழுதும் கோலுக்கு
கூர்முனை அவசியம்

உழும் விவசாயிக்கு ஏர்முனை அவசியம்

உழவின்றி உய்யா
உலகு

)
மொழியின் வழிய தறிவு.

விடை: வள்ளுவனின் வாய்மொழியை குற்றமறக் கற்று

கம்பனின் காவியத்தை
கசடறக் கற்று

இளங்கோவின் சிலம்பை
சீர்தூக்கிப் பார்த்து

மொழியின் வழிய
தறிவு

 

2.
இயற்கைஎன்னும் பொருண்மையில் வெண்பா எழுதுக.

விடை: தென்றல் வீச
பூமணம் பரவும் குன்றம்

குளிர குளிரில்
வாடும் மயிலும்

ஆட மழைமேகம்
சொரியும்

மண்ணு லகைக்
காண்.

 

இலக்கணத் தேர்ச்சி கொள்

1. வெண்பாவிற்கு ஏற்ப
அடுத்த சீர் என்னவாக
அமைக்கலாம்? பொருத்தமான சீரினைக்
கொண்டு கோடிட்ட இடங்களை
நிரப்புங்கள்.

விடை:

) அன்பே
தகளியாய்     (ஆர்வமாய் / தகளியாய்)

) வான்மழை
தூறலில்    (தூறலில் / பொழிந்திடின்)

) கண்ணிரண்டும் இல்லார்     (இலாதார்
/
இல்லார்)

) வெண்ணிலவு
காய்கிறது     (காய்கிறது / ஒளிர்கிறது)

) வெய்யோன்
காய்ந்திட     (காய்ந்திட / ஒளிர்ந்திட)

 

2.
மூன்றாவது சீர் அமைத்து எழுதுக.

விடை:

) கல்வி
கரையில கற்பவர்

) கல்லாரே
ஆயினும் கேட்க
(
கற்க)

) நல்லவை
செய்யின் நலமே

) அவமதிப்பும் ஆன்ற பொருள்

) உண்ணாது
நோற்பார் சான்றோர்

 

3.
பொருத்துக.

)
மாச்சீர் – 1. கருவிளம், கூவிளம்

)
காய்ச்சீர் – 2. நாள், மலர்

)
விளச்சீர் – 3. தேமாங்காய், புளிமாங்காய்

)
ஓரசைச்சீர் – 4. தேமா, புளிமா

)
1, 2, 4, 3

)
4, 3, 1, 2

)
2, 3, 1, 4

)
3, 4, 2, 1

விடை: ) 4, 3, 1, 2

 

4. கீழுள்ள சொற்களை
ஈற்றுச் சீராகக் கொண்டு
குறள் வெண்பா / நேரிசை
வெண்பா / இன்னிசை வெண்பா
எழுத முயற்சி செய்யவும்.

கடல், வாள்,
மழை, தேன், மரம்.

விடை:

கடல்: அலையென
எழுந்து ஒலி யெழுப்பி

ஆர்ப்பரிக்கும் பெருங்
கடல்.

வாள்: ஒளிவீசிக்
கூர்மையொரு எதிரியை வீழ்த்த

பளிச்சிடும் வேந்தன்
வாள்.

மழை
:

வானின்று பொழிந்து மண்ணை
வளமாக்கும்

தேன்சுவை அன்ன
தமிழ்

தேன்: மணம்தரும்
பூவில் சுவைதரும் இனிய

அமுத மெனும்
தேன்.

மரம்: இயற்கைத்
தாய் உவந்து அளித்த

மறக்க வெண்ணா
மரம்.

 

5.
வெண்பாவிற்குரிய தளைகள் யாவை?

விடை: இயற்சீர் வெண்டளையும், வெண் சீர் வெண்டளையும் வெண்பாவிற்குரிய தளைகள்
ஆகும்.

 

6.
ஒரு விகற்பம், பல விகற்பம் என்றால் என்ன?

விடை:

வெண்பாவில் நான்கடிகளும் ஓரெதுகையும் பெற்று வருவது ஒரு
விகற்பம் ஆகும்.

வெண்பாவில் முதல் இரண்டடி ஓரெதுகையும், அடுத்த இரண்டடி ஓரெதுகையும் பெற்று வருவது பல
விகற்பம் ஆகும்.

 

பலவுள் தெரிக

1.காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை இத்தொடரில்கலன்உணர்த்தும் பொருள்

)
போர்க்கருவி

)
இசைக்கருவி

)
தச்சுக்கருவி

)
வேளாண் கருவி

விடை: ) இசைக்கருவி

 

2.
சுரதா நடத்திய கவிதை இதழ்

)
இலக்கியம்

)
காவியம்

)
ஊர்வலம்

)
விண்மீன்

விடை: ) காவியம்

 

3.விண்வேறு ; விண்வெளியில் இயங்கு கின்ற வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறுஇத்தொடர் தரும் முழுமையான பொருள்:-

)
விண்ணும் வெண்மதியும் வேறு
வேறு

)
விண்வெளியும் செங்கதிரும் வேறு வேறு

)
வெண்மதியும் முகிலும் வேறு
வேறு

)
விண், விண்வெளியில் உள்ள
வெண்மதி, செங்கதிர், முகில்
அனைத்தும் வேறு வேறு

விடை: ) விண்,
விண்வெளியில் உள்ள
வெண்மதி, செங்கதிர், முகில்
அனைத்தும் வேறு வேறு

 

4.
சுவடியோடு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க :-

)
வசம்பு

)
கடுக்காய்

)
மணத்தக்காளியிலைச் சாறு

)
மாவிலைக்கரி

விடை: ) கடுக்காய்

 

5.’குழிமாற்றுஎந்தத் துறையோடு தொடர்புடைய சொல்

)
இலக்கியம்

)
புவியியல்

)
கணிதம்

)
வேளாண்மை

விடை: ) கணிதம்

 

குறுவினா

1.இடையீடுஎவற்றைக் குறியீடாகக் குறிப்பிடுகிறது?

விடை:

இக்கவிதை,
கவிஞரின் கவிதை சார்ந்த
எண்ணம், அதனை வெளிப்படு
வண்ணம், எழுதப்பட்ட கவிதையை
உள்வாங்கும் வாசகனின் மனநிலை
போன்றவற்றைக் குறியீடாகக் குறிப்பிடுகிறது.

 

2.
வசனம், கவிதை வேறுபாடு தருக

விடை:

வசனம்:

சொற்களைப்
பேசுகின்ற நேரத்தில் எதுகை
மோனை சேர்க்காமல் அளவுகளை
அறியாமல் அமைகின்ற வடிவம்
வசனம் ஆகும்.

கவிதை:

எதுகை,
மோனை அடி அளவுகள்
ஆகியன ஒன்றாக இணைந்து
அமைகின்ற வார்த்தைகள் கவிதை
ஆகும்.

 

3.எத்திசையிலும் சோறு தட்டாது கிட்டும்‘ – யாருக்கு?

விடை:

கலைத்தொழிலில் வல்ல அனைவர்க்கும் இவ்வுலகில் எத்திசையில் சென்றாலும் அத்திசையில் உணவு, தவறாமல் கிட்டும்

 

4.
அக்காலத்து கல்வி முறையில் மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் எவை?

விடை:

தமிழில்
நிகண்டு, நன்னூல், காரிகை,
தண்டியலங்காரம், நீதிநூல்கள் முதலியனவும், கணிதத்தில் கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று முதலி பலவகை வாய்பாடுகளும் அக்காலத்துக் கல்வி
முறையில் மனனப் பயிற்சிக்கு உதவின.

 

சிறுவினா

1.மூன்றான காலம் போல் ஒன்றுஎவை? ஏன்? விளக்குக மூன்றான காலம் போல் ஒன்றானவை ?

விடை:

எண்ணம்

வெளியீடு

கேட்டல்

விளக்கம்:

சொல்ல
விரும்பிய கருத்துகளெல்லாம் சொற்களில்
வருவதில்லை. விரும்பாத மாற்றங்களும், இலக்கை அடைய முடியாமல்
ஏமாற்றங்களும் மனம்
வருந்தக் காரணங்களாகின்றன. நினைப்பது
ஒன்றும் நடப்பது ஒன்றுமாக
இருக்கிறது. நினைப்பதும் நினைக்காததும் கலந்தும் நிகழ்கிறது. எலிக்குப்
பொறி வைத்தால் நம்
விரலே பொறியில் சிக்குவதுண்டு. நீருக்காக அலையும்போது சுவை
மிகுந்த இளநீரும் கிடைக்கும், வானத்திற்கு வெளிச்சம் தரும்
வால்மீனாக நாம் நினைத்தைப் பேச்சினில் கொண்டுவந்தாலும் புரிந்துகொண்டு கேட்பதாக சிக்கலாகிறது. கனியின்
அவை கனியைப் பொறுத்து
மட்டும், உண்போரின் பசியையும்
நாவின் சுவை மொட்டுகளையும் சார்ந்தது        

எண்ணம்,
வெளியீடு, கேட்டல் என்ற
மூன்றும் எப்போதும் ஒன்றாக
இருப்பது இல்லை. தனித்தனியாகத்தான் இருக்கும். இறந்தகாலம் கடந்தது; எதிர்காலம் கற்பனை
நிகழ்காலம் மட்டும் உண்மை
.
இந்த மூன்று காலங்களும் எப்போதும் ஒன்றாக இருப்பது
இல்லை, காலம் என்று
குறிப்பிடும்போது மட்டும்
ஒன்றாக இருக்கும். மற்றபடி
தனித்தனிதான்.

எண்ணம்,
வெளியீடு, கேட்டல் என்ற
மூன்றும் எப்போதும் ஒரே
கோட்டில் நன்றாக இணைவது
இல்லை. எப்போதாவது மட்டும்
ஒன்றாகக் காட்சி தரும்
அதனால்தான் இந்த மூன்றையும் மூன்றான காலம்போல் ஒன்று
என்று கவிஞர் சி.மன
குறிப்பிடுகிறார்.

 

2.
நீங்கள் ஆசிரியரானால் மாணாக்கரை அன்பினால் எவ்வகையில் நெறிப்படுத்துவீர்கள்?

விடை:

மாணவர்களிடம் பரிவுடனும் கனிவுடனும் நடந்து
கொள்வேன். மாணவர்களிடம் எவ்வித
வேறுபாடும் பார்க்காமல் நடுநிலையோடு செயல்படுவேன்.

மாணவர்களிடையே குழு மனப்பான்மையை ஏற்படுத்துவார்.

அறிவுரையும் வழிகாட்டுதலும் வழங்கி
ஆற்றுப்படுத்துவது, மாணவர்களிடம் உள்ள தனித்திறமையைக் கண்டறிந்து ஊக்கப்படுத்தும்

பொறுப்புகளைப் பகிர்ந்தளித்து, அனைவரும்
மதிக்கப்படுகிறோம் என்
எண்ணத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும்.

அதீத
குறும்பு செய்யும் மாணவனை
வகுப்பு தலைவராக நியமித்து
அவளை மனமாற்றம் செய்வேன்.

மாணவனைப்
பற்றிய அனைத்துத் தகவல்களையும் தெரிந்து கொண்டு அவர்களின்
நலன் சார்ந்த செயல்களை
மேற்கொள்வேன் மாணவர்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன்.

 

3.
மணலில் எழுதியது முதல் தற்காலம் வரைமுறையில் ஏற்பட்டுள்ள  மாற்றங்களைத் தொகுத்துரைக்க;

விடை:

பிள்ளைகள்
முதலில் மணலில் எழுதிப்
பழகுவார்கள்.

அதனால்
அவர்களுடைய எழுத்துகள் வரிசையாகவும் நன்றாகவும் அமையும்.

உபாத்தியாயர் முதலில் தரையில் எழுத,
அதன்மேல் பிள்ளைகள் விளம்பினார்கள்.

பிறகு
தாமே எழுதிப் பழகுவார்கள் எழுத்துகள் ஒன்றோடொன்று படாமல்
வரி கோணாமல் பழைய
காலத்தில் எழுதி வந்தார்கள் .

எழுத்துகளின் உருவங்கள் பல காலமாக
மாறாமல் இருந்து வந்தன
.

புள்ளி,
கால், கொம்பு, விலங்கு
முதலியவை வரி எழுத்தின்
உறுப்புகள்.

பெரியவர்கள் பழக்கி வந்த பழக்கத்தால் பலநூறு வருடங்களாகியும் எழுதும்
வழக்கத்தில் பெரிய மாறுபாடுகள் ஏற்படவில்லை .

பனையேடு,
சீதாளப்பத்திரம் முதலியவற்றில் எழுதுவது வழக்கமாகும்.

ஓலையில்
எழுதுவதற்குரிய பலவகை
எழுத்தாணிகள் இருந்தன.
ஒரு பக்கத்தில் மிக
நுண்ணிய எழுத்துகளாக இருபது
முப்பது வரி வரையில்
எழுதுவதற்குரிய மெல்லிய
எழுத்தாணிகள் இருந்தன.

மாணாக்கர்களுக்கு எழுதும் பழக்கம்
நன்றாக உண்டாகவேண்டும் என்று
ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும்
அவர்களைத் தனித்தனியே ஏடுகளில்
தாம் மேலே எழுதி
அதனைப்போல் எழுதிவரச் சொல்வார்கள்.

பிள்ளைகளுக்கு மணல்தான் சிலேட்டின் நிலையிலிருந்தது. பனையேடு தான் புத்தகம்,
எழுத்தாணியே பேனா.

ஆசிரியர்
மாணவர்களின் விரலைப் பிடித்து
சிலேட்டில் எழுதக் கற்றுத்
தருகிறார், பின்னர் ஆசிரியர்
எழுதிய எழுத்துகளின் மீது
மாணவர்கள் எழுதி எழுதிப்
பழகுகிறார்கள்.

எழுது
சுவடிகளில் ஆசிரியர் எழுத,
அதன்மேல் மாணவர்கள் எழுதுகிறார்கள். பின்னர் தாங்களே எழுதிப்
பழகுகிறார்கள்.

பத்து
விரல்களைப் பயன்படுத்தி கணிப்பொறியின் விசைப்பலகையில் தட்டச்சு
மூலம் எழுதுகிறார்கள் தற்போது
பேசப் பேச, திரையில்
எழுத்தாக மாறும் வசதி
உருவாகியுள்ளது.

 

4.வாயிலோயே எனத் தொடங்கும் ஒளவையார் புறநானூற்றுப் பாடல் பாடாண் திணைக்கு உரியது என்பதை நிறுவுக

விடை:

பாடாண்
திணை விளக்கம்:

ஒருவனுடைய
புகழ், வலிமை, கொடை,.அருள்
போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது பாடாண்திணை ஆகும்.

சான்று:

வாயிலோயே!
வாயிலோயே எனத் தொடங்கும்
ஔவையார் பாடல் நெடுமான்
அஞ்சியின் கொடைச் சிறப்புக்
கூறப்பட்டுள்ளது.

விளக்கம்:

பரிசிலர்க்கு வாயிலை அடைக்காத வாயில்
காவலனே ! அதியமான் தன்னுடைய
தகுதியை அறியானோ ? அறிவும்
புகழும் உடையோர் இவ்வுலகில் மாய்ந்துவிடவில்லை. தச்சனின்
தொழில்வல்ல பிள்ளைகளுக்கு காட்டில்
ஏதாவதொரு மரம் கிடைப்பது
போல, கலைத்தொழில் வல்ல
புலவர்களாகிய எங்களுக்கும் இவ்வுலகில் எந்த திசையில்
சென்றாலும் அத்திசையில் உணவு
தவறாமல் கிடைக்கும்.

பொருத்தம்:

கலைத்தொழில் வல்ல புலவர் பெருமக்களுக்கு இவ்வுலகில் எத்திசையில் சென்றாலும் அத்திசையில் உணவு தவறாமல்
கிடைக்கும் என்று புலவர்களின் அறிவாற்றலைப் பற்றி
புகழ்ந்து கூறியுள்ளார். மேலும்
பரிசிலர்க்கு அடையா
வாயிலோயேஎன்கிறார் ஔவையார்.
இதன நெடுமான் அஞ்சியின்
கொடைச்சிறப்பு கூறப்பஉரியதாயிற்று.

எனவே,
வாயிலோயே என்ற ஔவையார்
பாடல் பாடாண்திணை சேர்ந்ததுதான் என்று நிறுவப்படுகிறது.

 

நெடுவினா

1.
கவிதை எழுத அறிய வேண்டுவனவாகச் சுரதா கூறுவனவற்றை விவரிக்க?

விடை:

கவிதை
எழுத அறிய வேண்டுவன
.
சொற்களை அமைக்கும்போது எதுகை,
மோனை சேர்க்காமல், அடி
அளவை அறியாமல் அமைகின்ற
வடிவம் வசனம் ஆகும்.

எதுகை,
மோனை, இயைபு, முரண்,
சந்தம் முதலிய யாப்பிலக்கணம் நெறிகளுக்கு உட்பட்டு சொற்கள்
அமைவது கவிதையாகும்.

எழுத்துகள் தொடர்ந்து இருந்தால் அசைகள்
வரும். அசைகள் சேர்ந்து
சீர் வரும் .இரண்டு
சீரின் இடைவெளியில் தளைகள்
வரும்.

தளைகள்
தொடர்ந்து நடந்து அடிகள்
அமையும். அடியின் கீழ்
அடியிருந்தால் தொடைகள்
வரும்.

தொடை
நயங்கள் நன்கு அமைந்திருந்தால் கவிதை வரும். இவற்றைத்
தெரிந்து கொண்டு கவிதை
எழுதத் தொடங்க வேண்டும்.

மாவும்
புளியும் மரத்தில் காய்க்கும். கவிதையின் சீர்களில் தேமாவும்
புளிமாவும் நன்கு காணப்படும்.

உரிய
வடிவத்தில் எழுதாவிட்டால் தளைகள்
பொருந்தாது. பாடலின் இறுதிச்சீர் நாள், மலர், காசு,
பிறப்பு என்னும் வாய்பாடுகளில் ஒன்றைக் கொண்டு முடியும்.

செடியில்
பூத்த பூமீது வண்டுவந்து அமர்வது போல நல்ல
புலவர்களின் பாடல்களில் புகழ்
தங்கும்.

எளிய மக்களுக்கும் விளங்குகின்ற வகையில்
தமிழ்க் கவிதைகளைத் தரவேண்டும்

நுணுக்கமாக ஆராய்ந்து எழுத்துகளை அறிந்து
நம் முன்னோர்கள்போல் கற்றுவந்தால் அறம் பொருள்கள் உள்ளத்தில் தோன்றும். அறிவினிலே புகழ்
விளையும்.

இவற்றையெல்லாம் அறிந்துகொண்டு கவிதை
எழுதுவோர்க்குப் புகழும்
சிறப்பும் ஒருங்கே அமையும்.

 

2.
பண்டைக்காலக் கல்வி முறையில் ஆசிரியர் மாணவர்களுக்கிடையே நிகழ்ந்த கற்றல், கற்பித்தல் முறைகள் தொகுத்து எழுதுக?

விடை:

வித்யாரம்பம்:

முதன்முதலில் ஐந்தாம் வயதில் வித்யாப்பியாசம் செய்யும்பொழுது தாய்
தந்தையர் பிள்ளைகளை ஆசிரியர்களிடம் அடைக்கலமாகக் கொடுத்து
வந்தார்கள் பிள்ளைகளை பள்ளிக்கூடத்தில் சேர்க்கும் காலம்
ஒரு விசேட நாளாக
கொண்டாடப்பெறும்

முறை
வைப்பது:

ஏட்டின்மீது மஞ்சள் பூசி, பூசித்து
பையனிடம் கொடுத்து வாசிக்கச்
செய்வார்கள். உபாத்தியாயர் நெடுங்கணக்கைச் சொல்லிக் கொடுக்க மாணாக்கர்
அதனைப் பின்பற்றிச் சொல்லுவான். இப்படி உபாத்தியாயர் ஒன்றைச்
சொல்ல அதை மாணாக்கர்கள் பலரும் சேர்ந்து சொல்வதை
முறைவைப்பதுஎன்று கூறுவார்கள். உபாத்தியாயருக்குப் பதிலாக
சட்டாம்பிள்ளை முறை
வைப்பதும் உண்டு

மையாடல் விழா:

சுவடிகளில் உள்ள எழுத்துகள் செவ்வனே
தெரிவதற்காக சுவடியில் வசம்பு
மஞ்சள், மணத்தக்காளி இலைச்சாறு
அல்லது ஊமத்தையிலைச்சாறு, மாவிலைக்கரி,தர்ப்பைக்கரி முதலியவற்றைத் தடவுவார்கள். அந்தமை எழுத்துகளை விளக்கமாகக் காட்டுவதோடு கண்ணுக்கும் குளிர்ச்சியைத் தரும்.
இங்ஙனம் மை தடவிய
புத்தகத்தை வாசிக்கத் தொடங்குவதனால்மையாடல் விழாஎன்று
சொல்வார்கள்.

எழுதுதல்:

பிள்ளைகள்
முதலில் மணலில் எழுதிப்
பழகுவார்கள். அதனால் அவர்களுடைய எழுத்துகள் வரிசையாகவும் நன்றாகவும் அமையும். உபாத்தியாயர் முதலில்
தரையில் எழுத அதன்மேல்
பிள்ளைகள் விளம்புவார்கள். பிறகு
தாமே எழுதிப் பழகுவார்கள்.

கையெழுத்து:

எழுத்துகள் ஒன்றோடொன்று படாமல் வரிகோணாமல் பழைய காலத்தில் எழுதி
வந்தார்கள். பழைய ஏட்டுச்
சுவடிகளைப் பார்த்தால் இது
விளங்கும்.

எழுத்தின் வடிவம்:

புள்ளி,
கால், கொம்பு, வடிவம்
முதலிய வரி எழுத்தின்
உறுப்புகளைப் பெரியவர்கள் பழக்கி வந்த பழக்கத்தால் பல நூறு வருடங்கள்
ஆகியும் எழுதும் வழக்கத்தில் மாறுபாடுகள் ஏற்படவில்லை .

மனனப்பயிற்சி:

அடிப்படையான நூல்கள் எல்லாம் மாணவர்களுக்கு மனனமாக இருக்கும் தமிழில்
நிகண்டு, நன்னூல், காரிகை,
தண்டியலங்காரம், நீதிநூல்கள் மனனமாக இருக்கும். கணிதத்தில் கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று முதலிய பலவகை
வாய்பாடுகள் மனனமாக இருக்கும்.
அந்தாதி முறையைக் கொண்டும்
எதுகை, மோனைகள் கொண்டும்
செய்யுட்களை ஞாபகப்படுத்திக் கொள்வார்கள்.

அன்பினால் அடக்குதல்:

முற்காலத்தில் கொடிய தண்டனைகள் இல்லை.
ஆசிரியர்கள் அன்பினால் மாணாக்கர்களை வழிப்படுத்தி வந்தார்கள். அவர்கள்பால் இருந்த மரியாதை
பயத்தை உண்டாக்கியது. பிழைகளை
மறந்து புரியாத நிலையில்
அவர்கள் இருந்தார்.

வாதம்
புரிதல்:

கல்வியில்
வாதம் புரிதல் நம்
நாட்டுப் பள்ளிக் கூடங்களில் இருந்தது. மிகச் சிறந்த
நூற்பயிற்சி உடையவர்கள் அரசவைகளில் வாதம் புரிந்து தம்
கல்வித் திறமைகளை நிலைநாட்டுவர்.

சாந்துணையும் கற்றல்:

பள்ளிக்கூடத்திலிருந்து கற்கும் காலம்
கடந்த பின்னர், பழைய
காலத்தவர்கள் பின்பும்
எங்கெங்கே கலைகளைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் இருந்தார்கள், அங்கங்கே
சென்று அவர்களிடம் தாம்
முன்பு கல்லாதவற்றைக் கற்று
வந்தார்கள்.

 

3.சாலை விபத்தில்லாத் தமிழ்நாடு‘-இக்கூற்று நனவாக நாம் செய்ய வேண்டியன யாவை?

விடை:

நம்
நாடுதான் உலகிலேயே அதிக
சாலை போக்குவரத்து வசதிகளைக்
கொண்ட இரண்டாவது பெரிய
நாடாகும்.

ஏறக்குறைய
55
இலட்சம் கி.மீ.
சாலைகள் உள்ளன.

21 கோடிக்கும் மேற்பட்ட ஊர்திகள் உள்ளன.
தமிழ்நாடுதான் இந்தியாவில் சாலை விபத்துகள் அதிகமாக
நடக்கும் மாநிலமாக உள்ளது.

சாலை
விபத்தில்லா தமிழ்நாட்டை உருவாக்க
நாம் பின்பற்ற வேண்டுவன

வயது
நிறைந்தவர்கள் மட்டுமே
முறையான பயிற்சிகள் மூலம்
ஓட்டு உரிமத்தைப் பெற்று
மிகுந்த கவனத்துடன் வாகனத்தை
இயக்க வேண்டும்.

இரு
சக்கர வாகனத்தில் இருவர்
மட்டுமே பயணிக்க வேண்டும்
.

இரு
சக்கர வாகன ஓட்டிகள்
தலைச் நான்கு சக்கர
வாகன ஓட்டிகள் இருக்கைப்
பட்டை யும் கட்டாயம்
அணிய வேண்டும்.

வாகன
ஓட்டுநர்கள் வலப்புறமாகவோ, இடப்புறமாகவோ திருப்பும் முன்பு அதற்குரிய
விளக்கினை எரியச் செய்ய
வேண்டும்.

கைப்பேசியில் பேசிக்கொண்டும், காதணிக்
கேட்பிகள் பொருத்திக் கொண்டும்
வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க
வேண்டும்.

சாலையில்
ஊர்தியைக் குறுக்கும் நெடுக்குமாக இயக்குவதும், போட்டிப் பந்தயம்
எனச் சொல்லி பொது
வழியில் உச்ச வேகத்தில்
ஓட்டுவதையும் மது
அருந்திவிட்டு வாகனம்
ஓட்டுவதையும் கட்டாயம்
தவிர்க்க வேண்டும்.

தொடர்வண்டி இருப்புப்பாதைகள் மிகுந்த
கவனத்துடன் கடக்க வேண்டும்.

சாலை
குறியீடுகள், சாலையின் வகைகள்,
மைல் கற்களின் விவரங்கள்
பற்றித் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

போக்குவரத்து முறைப்படுத்தும் குறியீடுகள் மற்றும் போக்குவரத்துக் காவலர்களின் சாலை உத்தரவுகளுக்கு ஏற்பச்
சாலையைப் பயன்படுத்த வேண்டும்.

நடைமேடை,
நடைபாதையைப் பயன்படுத்துபவர்களையும், சாலையைக்
கடப்பவர்களையும் அச்சுறுத்தாமல் வாகனம் ஓட்ட வேண்டும்
சாலைச் சந்திப்புகளில் எச்சரிக்கையான அணுகுமுறை தேவை.

தேவையான
இடங்களில் சரியான சைகையைச்
செய்ய வேண்டும் எதிரில்
வரும், கடந்து செல்ல
முற்படும் ஊர்திகளுக்கு வழிவிட
வேண்டும் தேவை எனில்
வேகம் குறைத்து இதர
வாகனங்களுக்குப் பாதுகாப்புடன் வழிவிட வேண்டும்.

இதர
சாலை பயானாளிகளை நண்பராக
எண்ண வேண்டும் பள்ளி
மற்றும் கல்லூரி மாணவர்கள்,
சாலை விதிகள் மற்றும்
விபத்துகளைத் தடுப்பது
குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த
வேண்டும்.

மனிதத்
தவறுகளே மிகுதியான விபத்துகளுக்குக் காரணமாக அமைவது
தவறுகளைத் திருத்திக்கொள்ளுதல், விதிகளைப்
பின்பற்றுதல் வாயிலாக
மட்டுமே சாலை விபத்துகளைத் தடுக்க முடியும்.

சாலை
பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு. சாலையில் வாகனம் பந்தயம்
அல்ல; பயணம் மட்டுமே
ஓட்டுவது.

சாலை
பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு பெறுவதன் மூலம் எதிர்காலத்தில் சாலை விபத்துகளே இல்லாத
தமிழகத்தை உருவாக்க முடியும்.

download2Bbutton 7 Tamil Mixer Education

Avatar

admin

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

× Xerox [1 page - 50p Only]