Join Whatsapp Group

Join Telegram Group

12th History – Lesson 14 – இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும் – Tamil Medium

By admin

Updated on:

 

12th History – Lesson 14 – இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும் – Tamil
Medium

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1.கீழ்க்காண்பனவற்றுள் இரண்டாம் உலகப் போர் உருவாக எது காரணமாக இருக்கவில்லை ?

)
ஜெர்மனியோடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் நீதியற்ற
தன்மை

)பன்னாட்டு
சங்கத்தின் தோல்வி

)
1930
களில் ஏற்பட்ட பொருளாதாரப் பெருமந்தம்

)
காலனிய நாடுகளில் ஏற்பட்ட
தேசிய விடுதலை இயக்கங்கள்

விடை: ) காலனிய
நாடுகளில் ஏற்பட்ட தேசிய
விடுதலை இயக்கங்கள்

 

2.கெல்லாக்பிரையாண்ட் ஒப்பந்தம் …………. ஆண்டில் கையெழுத்தானது.

)
1927

)
1928

)
1929

)
1930

விடை: ) 1928

 

3.கூற்று: ஆயுதக்குறைப்பு மாநாடு பன்னாட்டு சங்கத்தால் ஜெனீவாவில் நடத்தப்பட்டது.

காரணம்:
பிரான்சுக்கு சமமாக ஜெர்மனி தளவாடங்களை கொண்டிருக்க முயல்வது பேச்சுவார்த்தைகளின் ஒரு முக்கிய அம்சமாக தோன்றியது.

)
கூற்றும், காரணமும் சரி.
காரணம் கூற்றை விளக்குகிறது

)
கூற்றும், காரணமும் சரி.
ஆனால் காரணம் கூற்றை
விளக்கவில்லை

)
கூற்று சரி. காரணம்
தவறு

)
கூற்று தவறு. காரணம்
சரி

விடை: ) கூற்றும்,
காரணமும் சரி. காரணம்
கூற்றை விளக்குகிறது

 

4.சீனாவிடமிருந்து மஞ்சூரியாவை ஜப்பான் எந்த ஆண்டு படையெடுத்து கைப்பற்றியது?

)
1931

)
1932

)
1933

)
1934

விடை: ) 1931

 

5.பத்தொன்பதாம் நூற்றாண்டின் முடிவில் ஐரோப்பியக் கண்டத்திற்குள் தொழிற்துறையில் வலிமையான சக்தியாக ………….. நாடு உருவாகியிருந்தது.

)
பிரான்ஸ்

)
ஸ்பெயின்

)
ஜெர்மனி

)
ஆஸ்திரியா

விடை: ) ஜெர்மனி

 

6.வெர்செய்ல்ஸ் ஒப்பந்தத்தின் சரத்துகளின் படி ஜனவரி 1935இல் ……….. பகுதியில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும்
என்று முடிவானது.

)
சூடட்டன்லாந்து

)
ரைன்லாந்து

)
சார்

)
அல்சேஸ்

விடை: ) சார்

 

7.கூற்று: இரண்டாம் உலகப்போரின் காலத்தில் போர்முறைகள் பெரிதும் மாற்றமடைந்திருந்தன.

காரணம்:
அகழிப் போர்முறை ஒதுக்கப்பட்டு விமான குண்டுவீச்சு பிரபலமானது.

)
கூற்று, காரணம் சரி.
காரணம் கூற்றை விளக்குகிறது.

)
கூற்று, காரணம் சரி.
ஆனால் காரணம் கூற்றை
விளக்கவில்லை

)
கூற்று சரி. காரணம்
தவறு.

)
கூற்று தவறு. காரணம்
சரி,

விடை: ) கூற்று,
காரணம் சரி. ஆனால்
காரணம் கூற்றை விளக்கவில்லை .

 

8.ஜெர்மனி 1939இல் ஆக்கிரமிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை ……. நாட்டோடு ஏற்படுத்திக் கொண்டது.

)
ஆஸ்திரியா

)
இத்தாலி

)
ரஷ்யா

)
பிரிட்டன்

விடை: ) ரஷ்யா

 

9.பேர்ல் துறைமுகத்தை ஜப்பான் தாக்குவதற்குத் திட்டம்
வகுத்தவர் ………….. ஆவார்.

)
யாமமோடோ

)
ஸ்கூஸ்னிக்

)
இரண்டாம் கெய்சர் வில்லியம்

)
ஹிரோஹிடோ

விடை: ) யாமமோடோ

 

10.குடியரசுத் தலைவர் ரூஸ்வெல்ட் அறிமுகப்படுத்திய கடன்குத்தகை முறை ………… வகையில் உதவி புரிந்தது.

)
பாசிச சக்திகளை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் நாடுகளுக்கு கூடுதல் வீரர்களை அனுப்புதல்

)
யூதர்களை ஹிட்லரின் படைகள்
கட்டவிழ்த்துவிட்ட கொலைவெறித் தாக்குதலில் இருந்து பாதுகாத்தல்

)
தோழமை நாடுகளின் வளங்களைப்
பெருக்கி, அவர்களுக்குத் தேவையான
ஆயுதங்களையும், வெடி
பொருட்களையும் வழங்குதல்

)
இரண்டாம் உலகப்போரில் காயமடைந்தோருக்கு மருத்துவ வசதிகளை
ஏற்படுத்துதல்

விடை: ) பாசிச
சக்திகளை எதிர்த்துப் போராடிக்
கொண்டிருக்கும் நாடுகளுக்கு கூடுதல் வீரர்களை அனுப்புதல்

 

11.அமெரிக்க ஐக்கிய நாட்டின் படைகளை ஆகஸ்ட் 1942இல் பசிபிக் பகுதியில் தலைமையேற்று வழிநடத்தியவர் …………. ஆவார்.

)
மெக்ஆர்தர்

)
ஐசன்ஹோவர்

)
ஜெனரல் டி கால்

)
ஜார்ஜ் மார்ஷல்

விடை: ) ஜெனரல்
டி கால்

 

12.ஜப்பானிய கடற்படையை அமெரிக்க ஐக்கிய நாட்டின் கடற்படை தோற்கடித்தமை ………. போரிலாகும்.

)
பிரிட்டன்

)
குவாடல்கனல்

)
எல் அலாமின்

)
மிட்வே

விடை: ) மிட்வே

 

13.ஜெர்மானியப் படைகள் முதல் பின்னடவைச் சந்தித்தது …………. என்னுமிடத்தில் ஆகும்.

)
போட்ஸ்டாம்

)
எல் அலாமின்

)
ஸ்டாலின்கிராட்

)
மிட்வே

விடை: ) ஸ்டாலின்கிராட்

 

14.கீழ்க்காண்பனவற்றுள் போட்ஸ்டாம் மாநாட்டின் அறிவிப்புகளில் அடங்காத ஒன்று எது?

)
கிழக்கு பிரஷ்யா இரு
பகுதிகளாகப் பிரிக்கப்பட வேண்டும்:
அதில் வடக்குப் பகுதி
சோவியத் நாட்டையும், தென்
பகுதி போலந்தையும் சென்று
சேரும்.

)
முன்பு சுதந்திர நகரமாக
இருந்த டான்சிக் போலந்தின்
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு
சேர்க்கப்படும்.

)
ஜெர்மனி நான்கு தொழில்
மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, பிரித்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு
பகுதியும் முறையே சோவியத்
நாடு, பிரிட்டன், அமெரிக்க
ஐக்கிய நாடு, பிரான்ஸ்,
ஆகியவைகளின் கட்டுப்பாட்டில் விடப்படும்.

)
ட்ரிஸ்டியை A மண்டலம் என்றும்
B
மண்டலம் என்றும் பிரிப்பதென்றானது. A மண்டலம் இத்தாலிக்கு கொடுக்கப்படவும், B மண்டலம்
யுகோஸ்லோவியாவிற்கு வழங்கப்படவும் முடிவு செய்யப்பட்டது.

விடை: ) ட்ரிஸ்டியை A மண்டலம் என்றும் B மண்டலம்
என்றும் பிரிப்பதென்றானது. A மண்டலம்
இத்தாலிக்கு கொடுக்கப்படவும், B மண்டலம்
யுகோஸ்லோவியாவிற்கு வழங்கப்படவும் முடிவு செய்யப்பட்டது.

 

15.கீழ்க்காண்பனவற்றுள் இரண்டாம் உலகப்போரின் விளைவுகளில் சேராத ஒன்று எது?

)
இரண்டாம் உலகப்போர் ஐரோப்பாவிலிருந்த பல முடியரசுகளுக்கு மரண அடி கொடுத்தது.

)
பிரிட்டனில் தொழிலாளர் கட்சி
ஒரு பொதுநல அடிப்படை
கொண்ட நாட்டை உருவாக்கியது.

)
பாசிச வாதத்திற்கு எதிரான
போராட்டம் ஏகாதிபத்தியத்திற்கு வெற்றியை
வழங்கியது.

)
அமெரிக்க ஐக்கிய நாடும்,
சோவியத் நாடும் இரு
வல்லரசுகளாக உருவெடுத்தன.

விடை: ) பாசிச
வாதத்திற்கு எதிரான போராட்டம்
ஏகாதிபத்தியத்திற்கு வெற்றியை
வழங்கியது.

 

16.கீழ் பொருத்தப்பட்டிருப்பவையில்
சரியான இணைகள் எது?

(1) ஜெனரல் டி
கால்பிரான்ஸ்

(2) ஹேல் செலாஸி
எத்தியோப்பியா

(3) ஜெனரல் படோக்லியோ
ஜப்பான்

(4) அட்மிரல் யாம்மோடோ
இத்தாலி

)
(1)
மற்றும் (2)

)
(2)
மற்றும் (3)

)
(3)
மற்றும் (4)

)
அனைத்தும்

விடை: ) (1) மற்றும்
(2)

 

17.பிரான்ஸ் இரண்டாம் அபினிப் போரில் பங்கெடுத்தது

)
பிரிட்டனுக்கு உதவி
புரிவதற்காக

)
பிரான்சுக்கென தனி
செல்வாக்கின் கோளத்தை
உருவாக்கிக் கொள்வதற்காக

)
சமய செயல்பாடுகளுக்கு அனுமதி
கோரும் பொருட்டு

)
ஓபிய வணிகத்தில் ஈடுபடும்
உரிமையை பிரான்ஸ் நாட்டினர்
நிலைநாட்டுவதற்காக

விடை: ) சமய
செயல்பாடுகளுக்கு அனுமதி
கோரும் பொருட்டு

 

18.மஞ்சு வம்சத்தின் காலம் …………. ஆண்டு வரை
நீடித்தது.

)
1908

)
1911

)
1912

)
1916

விடை: ) 1911

 

19.ஸ்பானியஅமெரிக்கப் போர்…………. சர்ச்சையை முன்னிறுத்தி 1898ஆம் ஆண்டில் நடைபெற்றது.

)
கியூபா

)
பிலிப்பைன்ஸ்

)
போர்டோ ரிக்கோ

)
படாவியா

விடை: ) பிலிப்பைன்ஸ்

 

20.கூற்று: பிலிப்பைன்ஸ் 4 ஜூலை 1946ஆம் ஆண்டு விடுதலையடைந்தது.

காரணம்:
அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஆதிக்கத்தின் கீழான தென் கிழக்கு ஆசிய உடன்படிக்கை அமைப்பில் பிலிப்பைன்ஸ் இணைந்தது.

)
கூற்று, காரணம் சரி.
காரணம் கூற்றை விளக்குகிறது.

)
கூற்று, காரணம் சரி.
ஆனால் காரணம் கூற்றை
விளக்கவில்லை

).
கூற்று சரி. காரணம்
தவறு.

)
கூற்று தவறு. காரணம்
சரி.

விடை: ) கூற்று,
காரணம் சரி. காரணம்
கூற்றை விளக்குகிறது.

 

II. குறுகிய விடையளிக்கவும்

1.கெல்லாக்பிரையாண்ட் உடன்படிக்கையின் முக்கியத்துவத்தை எடுத்தியம்புக.

விடை:

  • 1928ல் கெல்லாக்பிரையாண்ட் ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • பன்னாட்டுச் சங்கத்தில் அமெரிக்க ஐக்கிய நாடு
    உறுப்பினராகவில்லை என்றாலும்
    கூட்டத்தில் கலந்து கொண்டது.
  • இவ்வுடன்படிக்கையின்படிபோரை
    கைவிடுவதுஎன்பதை தங்களின்
    தேசிய கொள்கையாக ஏற்க
    உறுதிமொழி எடுத்துக்கொண்டது.

 

2.பன்னாட்டு சங்கத்திலிருந்து 1933ஆம் ஆண்டில் ஜெர்மனி ஏன் வெளியேறியது? மார்ச் 2020

விடை:

  • ஹிட்லர் பதவியேற்ற
    1933
    ம் ஆண்டு ஜெனிவாவில் பன்னாட்டு சங்கம் ஆயுதக்
    குறைப்பு மாநாடு ஒன்றை
    நடத்தியது.
  • பிரான்சிற்கு இணையாக
    ஜெர்மனியும் மறுஆயுதமாக்குதல் கோரிக்கை
    விடுத்தது.
  • பிரெஞ்சுக்காரர்கள் இந்த
    கோரிக்கைக்கு உடன்பட
    மறுத்துவிட்டனர்.
  • பிரான்சின் மறுப்பிற்கு பதிலடியாக ஹிட்லர் அம்மாநாட்டிலிருந்தும் பன்னாட்டு சங்கத்திலிருந்தும் ஜெர்மனியை விலக்கிக்
    கொண்டார்.

 

3.ரோம்பெர்லின் அச்சின் உருவாக்கத்திற்குப்
பின்புலமாக அமையப்பெற்றது எது?

விடை:

  • முசோலினியின் எத்தியோப்பியப் படையெடுப்பை பிரிட்டனும் பிரான்சும் கண்டித்தன.
  • ஹிட்லருக்கு இத்தாலியோடு நெருங்கிய நட்பை வளர்த்துக் கொள்ள வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.
  • இதுவே ரோம்பெர்லின்
    அச்சின் துவக்கமாக அமைந்தது.

 

4.மூனிச் ஒப்பந்தத்தின் கூறுகள் யாவை?

விடை:

  • மூனிச் மாநாட்டில் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி
    மற்றும் இத்தாலி ஆகிய
    நாடுகளின் பிரதம அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
  • சூடட்டன்லாந்தை ஜெர்மானியப் படைகள் ஆக்கிரமித்துக் கொள்ளலாம்.
  • செக்கோஸ்லோவாக்கியாவின் பகுதிகளை
    போலந்திற்கும், ஹங்கேரிக்கும் பிரித்துக் கொடுப்பது என்றும்
    முடிவு செய்யப்பட்டது.

 

5.டங்கிர்க் வெளியேற்றம் குறித்து நீவீர் அறிவது யாது?

விடை:

  • பிரெஞ்சு துருப்புகள் டங்கிர்க் கடற்கரைக்கு கடும்
    துப்பாக்கி முழக்கங்களுக்கிடையே விரட்டப்பட்டனர்.
  • டங்கிர்க்கிலிருந்து வெளியேற்றப்பட்ட வீரர்களே பாசிசவாதிகளுக்கு எதிராக
    பிரெஞ்சு அரசை நடத்திக்
    கொண்டிருந்த இராணுவ ஜெனரல்
    டி காலின் தலைமையிலான சுதந்திர பிரெஞ்சுப் படையின்
    கருவாக செயல்பட்டார்கள்.
  • டங்கிரிக் வெளியேற்ற
    சம்பவம் நிகழ்ந்திருக்காவிட்டால் பிரிட்டனால் ஜெர்மனியின் நாசவேலையால் பாதிப்புகளுக்குட்பட்ட நாடுகளை மீண்டும்
    ஒன்று திரட்ட முடியாமலே
    போயிருக்கும்.

 

6.பேர்ல் துறைமுகத்தை ஜப்பான் தாக்கியதன் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தி
எழுதுக.

விடை:

  • ஜப்பான் போல்
    துறைமுகம் மீது நிகழ்த்திய தாக்குதலால் அமெரிக்க மக்களின்
    நெஞ்சுரத்தை மார்ச் செய்வதற்கு மாறாக அவர்களை செயலில்
    இறங்கத் தூண்டியது.
  • அதுவரை பொதுக்கருத்தின்படி போரில் தலையிடாமல் இருந்த அமெரிக்கா, ஜப்பானின்
    மீது போர்ப் பிரகடனம்
    செய்தது.
  • இது முழுமையான
    உலகப்போருக்கு வழிவகுத்தது.
  • பிரிட்டனும், சீனாவும்
    அமெரிக்க ஐக்கிய நாட்டோடு
    கைகோர்த்தன.

 

7.அட்லாண்டிக் பட்டயத்தின் சிறப்புக் கூறுகளைப் பட்டியலிடுக.

விடை:

அட்லாண்டிக் பட்டயத்தின் சிறப்பு கூறுகள்

  • மக்களின் ஒப்புதல்
    இல்லாமல் பிரதேச சீரமைப்புகள் ஏற்படுத்தலாகாது.
  • அரசைத் தேர்ந்தெடுக்க முழு உரிமை கொண்டவர்கள் குடிமக்களே.
  • அனைத்து நாடுகளுக்கும் வணிகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும், உலகின் பிறபகுதிகளில்கிடைக்கும் மூலப்பொருட்களைப் பெறுவதிலும் சமத்துவத்தை ஏற்படுத்துதல்.
  • தடையில்லாமல் கடல்
    கடந்து செல்வதற்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்துதல்.
  • ஆக்கிரமிப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நாடுகளை
    ஆயுதக்குறைப்பிற்கு உட்படுத்துதல்.

 

8.நான்கிங் ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை ஆய்க. (மார்ச் 2020 )

விடை:

  • முதலாம் அபினிப்
    போரின் இறுதியில் நான்கிங்
    உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. பிரிட்டனுக்கு சீனாவின் கதவுகளைத் திறந்துவிட்டது.
  • சீனா ஹாங்காங்கை விட்டுக் கொடுத்ததோடு இழப்பீடாக
    ஒரு தொகையையும் வழங்கியது.

 

9.பிலிப்பைன்ஸில் 1902இல் நிறுவப்பட்ட அமெரிக்க ஆட்சியின் உடனடி விளைவுகள் யாவை?

விடை:

  • அமெரிக்க ஆட்சியின்
    ஆரம்பத்தில் முதன்மையான காலனிய
    நிறுவனங்கள் யாவும் தோற்றுவிக்கப்பட்டன.
  • ஆங்கில வழி
    கல்வி முறை, தேர்வுகள்
    அடிப்படையில் குடிமைப்பணி, மாகாண நீதிமன்றங்களை உள்ளடக்கிய நீதித்துறையை உருவாக்குதல்.
  • தேர்தல் மூலம்
    நகராட்சி மற்றும் மாகாண
    அரசுகளை நிறுவுதல் ஆகியவையாகும்

 

10.கவைட் கிளர்ச்சியின் முக்கியத்துவத்தை மதிப்பிடுக.

விடை:

  • கவைட் ஆயுதக்கிடங்கில் 200 பிலிப்பினோ துருப்புகள் மற்றும்
    ஊழியர்கள் கவைட் கிளர்ச்சியை நடத்தினர்.
  • ஸ்பானியர்கள் காட்டுமிராண்டித்தனமாகக் கையாண்ட செயலானது
    தேசியவுணர்வை வளர்த்தெடுக்க பெரிதும் உதவியது.
  • பிலிப்பைன்ஸ் நாட்டின்
    அறிவார்ந்த மக்கள் கைது
    செய்யப்பட்டு குறுகியகால விசாரணைக்குப் பின்னர்
    மூன்று குருக்கள் பொதுவெளியில் தூக்கிலிடப்பட்டு தியாகிகளானார்கள்.

 

III. சுருக்கமான விடையளிக்கவும்

1.ஸ்டாலின் கிராடை ஆக்கிரமிப்பதற்கு ஹிட்லர் ஏன் அதிக அக்கறை கொண்டார்? அது அவரின்

வாட்டர்லூவாகமாறிப்போனது எவ்வாறு என்பதனை சுட்டுக.

விடை:

  • ஜெர்மனியின் மின்னல்
    வேக தாக்குதல் உலக
    வரலாற்றில் கடுமையான போராக
    இரத்தம் கொட்டிய ஸ்டாலின்கிராடில் எதிர்கொண்டது.
  • ஆயுதங்களையும், டிராக்டர்
    வகை இழுவை எந்திரங்களையும் அதிக அளவில் தயார்
    செய்து
  • கொண்டிருந்த மிகப்பெரும் தொழில் நகரம் ஸ்டாலின்கிராட்.
  • எண்ணெய் வளம்
    மிக்க காகசஸ் பகுதியையும் கைப்பற்ற எண்ணினார்.
  • செல்வாக்கு கொண்ட
    சோவியத் தலைவரான ஜோசப்
    ஸ்டாலினின் பெயர் கொண்ட
    நகரை ஆக்கிரமிப்பது தனது
    பெருமையை உயர்த்தும் என்று
    ஹிட்லர் கருதினார்.
  • ஜெர்மானிய இராணுவத்தால் நீண்ட காலத்திற்கு ஸ்டாலின்கிராடை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாது என்பது தெளிவாகத்
    தெரிந்த பிறகும், ஹிட்லர்
    பின்வாங்க மறுத்தார்.
  • தேசிய உணர்வால்
    உத்வேகம் பெற்று ஓய்வில்லாமல் தாக்குதலைத் தொடுத்த ரஷ்ய
    படைகளின் முன் கடுங்குளிருக்கும் பசிக்கும் மரணத்துக்கும் தனது வீரர்களை ஹிட்லர்
    கொடுத்தார். இது இவரின்
    வாட்டர்லூவாக மாறிப்போனது.

 

2.நேச நாடுகள் ஜெர்மனி மீது குண்டு வீசி தாக்கியது பயங்கர தாக்குதல் பிரச்சாரங்களுக்கு
அடையாளமாக அமைந்ததுவிளக்குக.

விடை:

  • நேச நாடுகளின்
    குண்டு வீச்சு (1945 பிப்ரவரி
    13-15)
    ஜெர்மனியின் ட்ரெஸ்டன் நகரை
    முற்றிலுமாக அழித்தது.
  • இக்காலக்கட்ட தாக்குதல்கள் ஜெர்மனிக்கு எதிரானதிகிலூட்டும் குண்டுவீச்சுக்களாகவேஅடையாளப்
    படுத்தப்பட்டன. இச்சமயத்தில் 6,00,000 ஜெர்மன் குடிமக்கள் கொல்லப்பட்டார்கள்.
  • படிப்படியாக ஜெர்மானியப் படைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டன.

 

3.ஹக் கிளர்ச்சியின் முக்கியத்துவம் யாது?

விடை:

  • ஹக் என்றழைக்கப்பட்ட பொதுவுடைமைவாத விவசாயிகளையும் அவர்கள் போர்க்காலத்தில் தோழர்கள்
    என கருதியவர்களே தாக்கினார்கள்.
  • அரசின் படைகளால்
    ஹக்குகளின் பகுதிகள் தாக்குதலுக்கு உள்ளானதால் பர்திதோ கொமுனிஸ்டாங்க் பிலிப்பினாஸ் கொரில்லா
    போர் முறையை கையாண்டது.
  • ஆரம்பத்தில் அதை
    தற்காப்பு அடிப்படையில் மட்டுமே
    கைக்கொண்டார்கள்.
  • 1950 முதல் அக்கட்சி
    அதிகாரத்தை பெறும் உத்தியாக
    அதைப் பயன்படுத்திக் கொண்டது.
  • எனினும் 1950களின்
    மத்தியில் பிலிப்பைன்ஸ் அரசு
    அமெரிக்க ஐக்கிய நாட்டின்
    ஆதரவைப் பெற்றுஹக்
    கிளர்ச்சியை ஒடுக்கியது.

 

4.இரண்டாம் உலகப்போரின் முக்கிய விளைவுகளை முன்னிலைப்படுத்துக. (மார்ச் 2020)

விடை:

  •  இரண்டாம் உலகப்போரின் முக்கிய விளைவு குடியேற்றங்களின் விடுதலை ஆகும்.
  • ஆசியா மற்றும்
    ஆப்பிரிக்காவிலிருந்த ஐரோப்பிய
    நாடுகளுக்கு சொந்தமான குடியேற்றங்கள் விடுதலையடைந்தன.
  • பல துருவ
    உலகம் என்ற கோட்பாடு
    மறைந்து இரு அணிகளாக
    உலக நாடுகள் பிரிந்தன.
  • அமெரிக்காவும், சோவியத்
    யூனியனும் வல்லரசுகளாயின.
  • இதனால் கெடுபிடிப் போர் என்ற கோட்பாட்டுப் போர் அமெரிக்கா மற்றும்
    சோவியத் யூனியன் இடையே
    தொடங்கியது.

 

5.சீனாவில் நிகழ்ந்த பாக்ஸர் கிளர்ச்சி பற்றிய குறிப்புகளைத் தருக.

விடை:

  • பாக்ஸர்கள் பெரும்பாலும் ஷாண்டுங் மாகாண விவசாயிகள்.
  • ஐரோப்பியர்களின் செயல்பாடுகளும் உள்ளூர் நிர்வாகத்தில் அவர்களது
    குறுக்கீடுகளும் சீனர்களுக்கு வெறுப்பை தந்தது.
  • 1900 ஆம் ஆண்டு
    இரு விளைச்சல் தோல்வியும் மஞ்சள் ஆற்றின் வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்புகளை அடுத்து
    பாக்ஸர் கிளர்ச்சி வெடித்தது.
  • இவர்களது முக்கியக்
    குறிக்கோள்கள் மஞ்சு
    வம்சத்தை முடிவிற்கு கொண்டு
    வருவதும் முறைகேடாக சலுகைகளை
    பெற்றுவந்த மேற்கத்தியர்களை சீனாவை
    விட்டு அப்புறப்படுத்துவதேயாகும்.
  • பாக்ஸர்கள் தேவாலாயங்களையும், அயல்நாட்டினரின் வீடுகளையும் தீக்கிரையாக்கினர்.
  • கிறித்துவ சமயத்தை
    தழுவிய சீனர்களைப் பார்த்த
    இடத்திலேயே கொன்று குவித்தார்கள்.
  • பன்னாட்டுப் படை
    தாக்குதலில் ஏராளமாக பொதுமக்களும் கிறித்துவர்களும் கொல்லப்பட்டனர்.
  • பாக்ஸர் கிளர்ச்சி
    1901
    செப்டம்பர் 7ல் பாக்ஸர்
    முதன்மை குறிப்போடு முடிவிற்கு வந்தது.

 

6.சீன தேசிய அரசியலில் கோமின்டாங் கட்சியின் பங்கை விவாதத்திற்கு உட்படுத்துகள்

விடை:

  • சீனாவின் விடிவெள்ளி என போற்றப்பட்ட டாக்டர்.
    சன்யாட்சென்
    என்பவர் கோமிங்டாங் கட்சியை
    ஆரம்பித்தார்.
  • சீனாவை தன்
    கட்டுப்பாட்டின் கீழ்
    கொண்டு வந்தார்.
  • ரஷ்யாவின் உதவியுடன்
    சீனாவில் சீர்திருத்தங்களை கொண்டுவர
    விரும்பினார்.
  • 1924ல் சன்யாட்
    சென் மறைந்ததும் கோமின்டாங் கட்சியின் தலைமைப் பொறுப்பை
    சியாங்கே ஷேக்
    ஏற்றார்.
  • தொடக்கத்தில் கோமின்டாங் கட்சிக்கும்கம்யூனிஸ்டுகளுக்கும் நல்லுறவு
    இருந்தது. ஆனால் விரைவில்
    எதிரிகளாயினர்.
  • 1945ல் கோமிங்டாங் கட்சியினருக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் ஏற்பட்டது.
  • போரின் முடிவில்
    மாசே துங் வெற்றி
    பெற்று சீன மக்கள்
    குடியரசு ஏற்பட்டது.
  • சியாங் கே
    ஷேக் தைவானுக்கு தப்பி
    சென்று அங்கு தேசிய
    சீனாவை அமைத்தார். அமெரிக்கா
    இதனை ஆதரித்தது.

 

7.இந்தோனேஷிய விடுதலைக்கு சுகர்னோ ஆற்றியப் பங்கை மதிப்பிடுக.(மார்ச் 2020)

விடை:

  • சுகர்னோ இந்தோனேஷிய தேசிய கட்சியை நிறுவினார். இது மதச்சார்பற்ற வர்க்கத்தினரால் ஆதரிக்கப்பட்டது.
  • ஆனால் 1931ல்
    இவரது தலைமை அலுவலகம்
    சோதனை செய்யப்பட்டது. சுகர்னோ
    கைது செய்யப்பட்டார்.
  • டச்சுக்காரர்கள் சுகர்னோவின் ஆட்சியை அங்கீகரிக்க மறுத்தனர்.
    அவரோ குடியரசுத் தலைவர்
    பதவியைத் துறக்க முன்வரவில்லை .
  • டச்சுஇந்தோனேஷிய ஒப்பந்தப்படி ஜாவா,
    சுமத்ரா மற்றும் பிற
    தீவுகளை இணைத்து இந்தோனேஷிய ஐக்கிய நாடு உருவாக்கப்பட்டது.
  • 1949 டிசம்பரில் இந்தோனேஷியா விடுதலை பெற்ற நாடானது.

 

IV. விரிவான விடையளிக்கவும்

1.இரண்டாம் உலகப்போரின் விதைகளை வெர்செய்ல்ஸ் ஒப்பந்தமே தூவியது என்பதனை தகுந்த காரணத்தோடு விளக்குக.

விடை:

  • முதல் உலகப்போரில் ஜெர்மனி தோல்வியடைந்தது.
  • பாரிஸ் அமைதி
    மாநாட்டுக்கு அது
    அழைக்கப்படவில்லை.
  • கடுமையான மற்றும்
    அவமானகரமான உடன்படிக்கையில் கையெழுத்திடும்படி அதுவற்புறுத்தப்பட்டது.
  • ஜெர்மனிய நிலப்பகுதிகள் பல அதனிடமிருந்து பறிக்கப்பட்டன.
  • அதன் குடியேற்றங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
  • கடற்படை முற்றிலும் கலைக்கப்பட்டது. இராணுவ
    வலிமை பெரிதும் குறைக்கப்பட்டது.
  • ஜெர்மனியில் நிறுவப்பட்டிருந்த வெய்மர் குடியரசு
    போருக்குப்பின் தோன்றிய
    பிரச்சனைகள் எதையும் சமாளிக்க
    இயலாமல் தடுமாறியது.
  • ஜெர்மனிக்கு நேர்ந்த
    அவமானத்தை துடைத்தெறிய அதன்
    மக்கள் துடித்தனர்.
  • எனவே இரண்டாம்
    உலகப்போரை பழிவாங்குவதற்கான போர்
    என்றே கூறலாம்.
  • இரண்டாம் உலகப்
    போருக்கான விதைகள் வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையில் ஊன்றப்பட்டிருந்தன.

 

2.இரண்டாம் உலகப்போர் ஏற்பட ஜெர்மனியும், ஹிட்லரும் எந்த அளவிக்குக் காரணமாவார்கள் என்பதனை ஆய்ந்து கூறுக.

விடை:

சார்
பகுதி:

  • 1935ல் சார்
    பகுதியில் நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பில் 90 சதவீத மக்கள்
    ஜெர்மனியுடன் இணைவதை
    விரும்பினர்.
  • இது ஹிட்லருக்கு மனவலிமையை தந்தது.
  • ரைன்லாந்து:
  • வெர்செய்ல்ஸ் ஒப்பந்தத்தை மீறி 1936ல் ஹிட்லர்
    இப்பகுதியில் ராணுவத்தை
    குவித்தார்.

ஆஸ்திரியா ஜெர்மனி இணைப்பு:

  • ஹிட்லர் ஆஸ்திரியாவில் பிறந்ததால் அதை ஜெர்மனியுடன் இணைக்க விரும்பினர்.
  • 1938ல் ஆஸ்திரியா
    பிரதமர்ஸ்கூஸ்னிக்கை அழைத்து
    நாஜி கட்சியை அங்கீகரிக்க கட்டாயப்படுத்தினார்.
  • வேறுவழியேதும் இல்லாத
    ஸ்கூஸ்னிக் உடன்படவே ஜெர்மானிய
    படைகள் அந்நாட்டின் மீது
    கட்டுப்பாட்டை நிறுவின.

சூட்டன்லாந்து ஆக்கிரமிப்பு:

  • 1936ல் ஹிட்லர்
    செகோஸ்லாவேகியாவின் சூட்டன்லாந்தில் வசிக்கும் ஜெர்மானியர் ஒடுக்கப்படுவதாக கூறி அதை ஆக்கிரமிக்க ராணுவத்திற்கு உத்தரவிட்டார்.

முனிச்
ஒப்பந்தம்:

  • பிரிட்டன் பிரான்ஸ்
    உடன் ஜெர்மனி செய்து
    கொண்ட ஒப்பந்தப்படி ஹிட்லர்
    செகோஸ்லாவேகியாவை ஆக்கிரமிக்கக் கூடாது.
  • ஸ்லோவாக் மற்றும்
    செக் இன மக்கள்
    இடையே ஏற்பட்ட முரண்போக்கால் ஒப்பந்தத்தை மீறி ராணுவத்தை
    அங்கு அனுப்பி ஆக்கிரமித்தார்.

போலந்து படையெடுப்பு:

  • 1939 செப்டம்பர் 1ல்
    போலந்து நாட்டில் வாழும்
    ஜெர்மானியரை அந்நாடு ஒடுக்குவதாக கூறி அதன் மீது
    படையெடுத்தார்.
  • இரண்டு நாளில்
    போலந்தை விட்டு வெளியேறாவிட்டால் பிரிட்டனும் பிரான்சும் ஜெர்மனி மீது போர்
    .
    தொடுக்கும் என்ற எச்சரிக்கையை புறந்தள்ளியதால் இரண்டாம்
    உலகப்போர் மூண்டது.

 

3.சீனாவில் பொதுவுடைமை அரசு உருவாக மாசேதுங்கின் பங்களிப்பை விவரித்து எழுதுக.

விடை:

  • 1918ல் பீகிங்
    பல்கலைக்கழகத்தில் உதவி
    நூலகராக மாவோ பணி
    புரிந்தார். அடுத்த ஆண்டு
    செயல்பாட்டாளராக மாறிய
    மாவோ தீவிர பொதுவுடைமைவாதியாகவும் உருப்பெற்றார்.
  • ஊழல் வன்முறை
    மலிந்த கோமிண்டாங் கட்சியினர் நகர்புறத்தில் இறுக்கமாக
    இருப்பதை உணர்ந்த மாவோ
    விவசாயகுடிகளை ஒன்று
    திரட்டினார்.
  • காடுகளால் சூழப்பட்ட
    மலைப்பாங்கான பகுதிகளில் மாவோவும் தோழர்களும் 7 ஆண்டுகள்
    கழித்தனர்.
  • கோமிண்டாங் கட்சி
    இவர்களை அழிக்கும் நோக்குடன்
    5
    படையெடுப்புகளை நிகழ்த்திடினும் அவர்களால் அம்மலைப்பகுதியை ஊடுருவ
    முடியவில்லை.
  • மாவோவின் பலம்
    நாளுக்கு நாள் அதிகமானதால் பொதுவுடைமையாளர்களுக்கு யாங்கை
    ஷேக்கின்
  • தாக்குதலிலிருந்து பாதுகாப்பு கிடைத்தது.
  • பாதுகாப்பு கருதி
    மாவோ ஹீனானை விட்டு
    அகல முடிவு செய்தார்.
    1934
    ல் பொதுவுடைமை ராணுவ
    நீண்ட பயணம் 1 லட்சம்
    பேருடன் கிளம்பியது.
  • கோமிண்டாங் தாக்குதலை
    சமாளித்து 6000 மைல்களை கடந்து
    ஹேன்ஷியை அடைந்த போது
    – 20000
    பேராக குறைந்தனர்.
  • அங்கு மேலும்
    பொதுவுடைமை ராணுவம் இணைந்ததில் 10 மில்லியன் மக்களின் ஆட்சியாளரானார்.

 

4.இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளின் விடுதலைப் போராட்டங்களில் பொதுவான மற்றும் வேறுபட்ட கூறுகளை ஒப்பிட்டாய்ந்து எழுதுக.

விடை:

பொதுவான கூறுகள்:

  • இந்தோனேஷியா மற்றும்
    பிலிப்பைன்ஸ் இரண்டுமே
    ஐரோப்பிய ஏகாதிபத்திய காலனி
    நாடுகளாகும்.
  • இரண்டாம் உலகப்போருக்குப் பின் இந்நாடுகள் விடுதலை
    பெற்றன.
  • இந்நாடுகளில் தேசியவாத
    பொதுவுடைமை கட்சிகள் தோன்றி
    பரவின.
  • இரு நாடுகளிலும் மேலை நாட்டு கல்வி,
    ஐரோப்பிய கலாச்சாரம் பரவின.
    ஆங்கில மொழியும், ஆங்கில
    வழி கல்விமுறையும் புகுத்தப்பட்டது.

வேறுபட்ட கூறுகள்:

  • இந்தோனேஷிய டச்சு
    காலனி நாடாகவும், பிலிப்பைன்ஸ் ஸ்பானிய காலனி நாடாகவும்
    இருந்தன.
  • இரண்டாம் உலகப்போரின் போது இந்தோனேஷியா பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் வந்தது.
    பிலிப்பைன்ஸ் அமெரிக்கா
    கட்டுப்பாட்டில் வந்தது.
  • .நா.
    சபையின் நடவடிக்கையால் இந்தோனேஷியா 1948ல் விடுதலை அடைந்தது.
  • அமெரிக்க வாக்குறுதியின்படி தேர்தல் நடத்தப்பட்டு பிலிப்பைன்ஸ் விடுதலை
    அடைந்தது.

 

V. செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. பேர்ல் ஹார்பர்
(Pearl Harbour)
மற்றும் ப்ரம் ஹியர்டு
எடர்னிட்டி (From Here to Eternity) போன்ற
திரைப்படங்களை மாணவர்கள்
காண ஏற்பாடு செய்யலாம்.

2. ”அமெரிக்க ஐக்கிய
நாடு இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானின் மீது
அணுகுண்டை வீசித்

தாக்குவது நியாயமானதுதான் என நினைத்ததா?” மாணவர்கள்
விவாதிக்கலாம்.

3. உலகபுற எல்லை
(World outline Map)
வரைபடத்தில் இரண்டாம் உலகப்போரில் பங்கெடுத்த நாடுகள், போர்

நடைபெற்ற முக்கியமான பகுதிகள் போன்றவற்றை குறிக்க
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழிகாட்டலாம்.

4. தளபதிகளான யுவான்ஷி
காய், மெக்ஆர்தர், ஜார்ஜ்
மார்ஷல், படோக்லியோ போன்றவர்களின் வரலாற்றை

மட்டுமல்லாது புரட்சிகர
/
தேசியவாத தலைவர்களான ஹங்க்ஹ
ஸ்யுசுவான், அகுயினால்டோ போன்றவர்களின் சரிதையையும் மாணவர்கள் அறிய முனையலாம்.

Related Post

Leave a Comment

× Xerox Shop [1 page - 50p Only]